கோவை: கோவையில் இன்று காலை முதல் மழை பெய்து வரும் நிலையில், பள்ளி மாணவர்கள் மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு சென்று வருகின்றனர். கோவை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை சற்றே ஓய்ந்திருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சூழலில் இன்று காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து. குறிப்பாக சிங்காநல்லூர், ராமநாதபுரம், காந்திபுரம், உக்கடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து. இந்த மலை குறித்த முன்னறிவிப்பை பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் முறையாக தெரிவிக்கவில்லை.


இதனால் இன்று காலை பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் கடும் அவதியுற்றனர். கொட்டும் மழையில் நனைந்தபடியே குழந்தைகள் பள்ளிகளுக்குச் சென்றனர். மழை (TN Rain) காரணமாக மாவட்ட நிர்வாகம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கும் போது எல்லாம் மழை பெய்வது கிடையாது.


ALSO READ | வானிலை தகவல்: மழைக்கால இறுதி நாட்களில் தமிழகம்


அதே நேரத்தில், மலை குறித்த முறையான முன்னறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வழங்காததாலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காததாலும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், காலை நேரத்தில் வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.


எனவே கோவை மாவட்ட நிர்வாகம் இதுபோன்று அலட்சியமாக நடந்து கொள்ளாமல் மழை குறித்த முன்னறிவிப்பை மக்களுக்கு வழங்கி அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் துரிதம் காட்ட வேண்டும் என்பது கோவை மக்களின் கோரிக்கையாக உள்ளது.


ALSO READ | கொசஸ்தலை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR