தமிழகத்தில் கடந்த வாரங்களில் பெய்த கனமழை (TN Rains) காரணமாக தக்காளியின் விலை ரூ 150 வரை விற்கப்பட்டு வந்தது. கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலை ரூ.100 முதல் 130 வரையும் சில்லறை விலை ரூ.130 முதல் ரூ.150 வரையும் விற்கப்பட்டு வந்த நிலையில் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்தனர். தக்காளியின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு  அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனிடையே தக்காளி மட்டுமின்றி மற்ற காய்கறிகளின் விலையும் சற்று அதிகரித்தது. இந்நிலையில் பசுமை பண்ணை கடைகள் மூலம் தக்காளி ரூ 90-க்கு விற்க தமிழக அரசு ஏற்பாடு செய்தது. மேலும் வட மாநிலங்களிலிருந்து தக்காளி வர தொடங்கியதால் விலை குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் தக்காளி விலை உயர்ந்திருக்கிறது.


ALSO READ | நகராட்சி பொறியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்


ஒட்டன்சத்திரம் ,தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வருகின்றன. மதுரை,தேனி,திண்டுக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் காய்கறி வரத்து குறைந்து காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.


இன்று சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ 110 ஐ தொட்டிருக்கிறது. அதே போல் கத்தரிக்காய் விலையும் ரூ 100 முதல் ரூ 110க்கு விற்கப்படுகிறது. மழையால் முருங்கைக்காயின் விலையயும் பெருமளவு உயர்ந்துள்ளது.  ஒரு கிலோ முருங்கைக்காய் விலை நேற்றைய தினம் ரூ 330 க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் முருங்கைக்காயின் விலை ரூ 270க்கு விற்கப்படுகிறது.


ALSO READ | உச்சம் தொடும் காய்கறி விலை; இன்றைய விலை என்ன


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR