Chennai Viral Couple Latest News Updates: சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில் அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்தும் ஆண் மற்றும் அவருடன் வந்த பெண் ஆகியோர் நேற்று நள்ளிரவு காரை நிறுத்திவைத்திருந்தனர். அப்போது அவர்களிடம் போலீசார் அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். போலீசார் அவர்களின் காரை எடுக்க அறிவுறுத்தியபோது, அவர்கள் இருவரும் போலீசாரை மிகவும் கீழ்த்தரமாகவும் ஆபாசமாகவும் பேசியுள்ளார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனை பணியில் இருந்து காவலர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. அவர் வீடியோ எடுப்பதை பார்த்தும் அந்த இரு நபர்களும் தங்களின் வசையை நிறுத்தவே இல்லை. தாங்கள் பெரிய இடம் என்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு இப்போவே ஃபோன் போடவா என்றும் போலீசாரை மிரட்டும் தொனியில் அந்த நபர் பேசுவது வீடியோவில் பதிவானது. வீடியோ எடுக்கும் காவலர் மற்றும் தங்களின் கேள்வி எழுப்பிய காவலர்கள் அனைவரையும் மரியாதை இல்லாத வகையில் அவர்கள் நடத்துவது வீடியோவில் பதிவானது. 


காவலர்களை மிரட்டிய ஜோடி


ஊடகங்களிலும், யூ-ட்யூப்களிலும் போட்டாலும் பரவாயில்லை என்ற ரீதியில் அந்த நபர் பேசினார். அதுமட்டுமின்றி தொடர்ந்து ஆபாசமான வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தினார். நாளை காலை உங்கள் (காவலர்கள்) முகவரி அனைத்தையும் எடுத்து, உங்களை உண்டுஇல்லாமல் பண்ணுவேன் என்றும் காலையில் நீங்களெல்லாம் டிபன் சாப்பிடக்கூட முடியாது என்றும் அந்த நபர் மிரட்டுவது வீடியோவில் பதிவாகி உள்ளது. 


வைரலாகும் வீடியோவை கிழ் உள்ள இந்த லிங்க்-ஐ கிளிக் செய்து பார்க்கலாம்:



மேலும் படிக்க | காஷ்மீர் டூ கன்னியாகுமரி.. முதல் மின்சார பேருந்தின் சாதனை பயணம் வெற்றி!


அந்த நபர் தான் மது அருந்தியிருப்பதாக தன் வாயாலே கூறினார். டிரைவர் வரும் வரை இங்கேதான் நிற்பேன் என முதலில் கூறிய அவர் மேல் அதிகாரிகளை வரச்சொல்லும்படி காவலர்களை அதட்டினார். தொடர்ந்து போலீசார் வீடியோ எடுத்ததால் கோபமுற்று அந்த பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து அவரே காரை ஓட்டிக்கொண்டு புறப்பட்டுச் சென்றார். TN 10 AE 2500 என்ற பதிவெண் கொண்ட காரை அவர் ஓட்டிச்சென்றதும் வீடியோவில் பதிவாகி இருந்தது. 


வேளச்சேரியில் வைத்து கைது


அந்த இருவரும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அநாகரீகமாக நடந்துகொண்ட அந்த இருவரின் மேலும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி வந்தனர். 


இந்நிலையில் அங்கிருந்து தப்பியோடிய அந்த ஜோடியை கைது செய்வதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் சென்ற காரின் அடையாளத்தை வைத்து சிசிடிவி உதவியுடன் தேடப்பட்டு வந்த நிலையில், வேளச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் வைத்து அந்த இருவரும் மயிலாப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 



5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு


இவர்கள் இருவரும் கணவன் - மனைவி இல்லை என்றும் அவர்கள் திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் அவர்கள் நேற்று இரவு மதுபோதையில் இருந்ததும் தெரியவந்திருக்கிறது. காரில் இருந்த மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 


கைதான இருவரில் அந்த ஆணின் பெயர் சந்திரமோகன் என தெரியவந்துள்ளது. அந்த பெண்ணின் அடையாளம் போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளது. இருவருரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசை மிரட்டியதாக சந்திரமோகனை மயிலாப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். சந்திரமோகன் மீது ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


மேலும் படிக்க | Savukku Shankar | என்னை போலி என்கவுண்டர் செய்ய காவல்துறை திட்டம் - சவுக்கு சங்கர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ