விருதுநகர் மேலதெருவைச் சேர்ந்த திமுக பிரமுகர் மற்றும் பால் பண்ணை உரிமையாளரான ஹரிஹரன் என்பவருடன் 22 வயதுடைய இளம்பெண்ணிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நண்பர்களாக பழகியவர்கள் ஒரு கட்டத்தில் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். விழுந்து விழுந்து காதல் செய்த ஹரிஹரன் தன்னுடைய உண்மை முகத்தை ஒரு நாள் காட்டியிருக்கிறார். ’நிச்சயம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று ஆசை வார்த்தை கூறி பெத்தனாட்சி நகரில் உள்ள மறைமுகமான மருந்து குடோனிற்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்றிருக்கிறார். காதலன் தானே என்று இளம்பெண்ணும் அவரை நம்பி சென்றிருக்கிறார். அங்கு வைத்து இருவரும் எல்லை மீறியிருக்கிறார்கள். அப்போது ஹரிஹரன் இருவரும் உல்லாசமாக இருந்ததை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். அங்கிருந்து புறப்பட்ட சென்ற ஹரிஹரன் அதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. தான் எடுத்து வைத்திருந்த வீடியோ காட்டி மிரட்ட தொடங்கினார். அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணிற்கு அப்போதுதான் புரிந்தது தான்ஏமாற்றப்பட்டிருப்பது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிலிருந்து எப்படி மீண்டு வருவதென தெரியாமல் திகைத்துப் போனார். அதை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட ஹரிகரன் வீடியோவை காட்டி பல முறை காதலியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். எவ்வளவோ கெஞ்சிக்கேட்டும் வீடியோ டெலிட் செய்யாமல் திரும்ப திரும்ப தன்னுடைய வக்கீரபுத்தியை இளம்பெண்ணிடம் காட்டியுள்ளார். அதற்கிடையே, தான் எடுத்து வைத்திருந்த வீடியோவை தனது நண்பரான திமுக நிர்வாகி ஜீனைத் அகமது, பிரவீன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 4 பேர் உள்பட 6 பேருக்கு சேர் செய்துள்ளார். இதனையடுத்து அந்த வீடியோ வைத்து இளம்பெண்ணை மிரட்டிய 7 பேரும் கடந்த 8 மாதங்களாக மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. 



இதனால் மனமுடைந்து போன இளம்பெண் இதுகுறித்து தன் வீட்டருகே உள்ள மாடசாமி என்பவரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். தனக்கு தெரிந்தவர் தன்னை எப்படியாவது இளைஞர்களிடம் இருந்து காப்பாற்றிவிடுவார் என்று நினைத்துக்கொண்டிருந்த இளம்பெண்ணிற்கு அதுவும் பலாய்ப்போனது. மாடசாமியும் வீடியோ காட்டி மிரட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். 



இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் திமுக நிர்வாகிகளான ஹரிஹரன், ஜீனைத் அகமது, மற்றும் பிரவீன், மாடசாமி மேலும் 4 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் 8 பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். பொள்ளாச்சி சம்பவம் ஏற்படுத்திய தாக்கத்தை மீண்டும் கண்முன்னே கொண்டுவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நாடு முழுக்க இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். 



இந்நிலையில், இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதலைத் தருகிறது. குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.



தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பதிவில், விருதுநகரில், ஒரு கும்பல் வீடியோ மூலம் பிளாக்மெயில் செய்து, 22 வயது பெண்ணை  கூட்டாக பலாத்காரம் செய்த அவலச் செய்தியறிந்து அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன் என்றும் இதைவிட கூடுதல் அதிர்ச்சியளிக்கும் விஷயம் - இந்த வெட்கக்கேடான செயலுக்கு மூளையாக இருந்தது ஒரு உள்ளூர் திமுக பிரமுகர் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது அவசியமே, ஆனால், தற்போது  திமுக அரசில் ஒட்டுமொத்த காவல் துறையை மேம்படுத்துவதே, மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். முதலமைச்சர் ஸ்டாலின் தனது கட்சிக்காரர்களின் பிடியிலிருந்து உள்ளூர் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பாரா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும் படிக்க | காதலியை பார்க்க சென்ற இளைஞர் பரிதாப சாவு..!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR