கர்நாடக மாநிலத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணை, முழு கொள்ளளவான 84 அடியை எட்டியது.


பருவமழை தொடங்கிய நிலையிலே  கபிணி அணை  வேகமாக நிரம்பியது. இதனையடுத்து,  அணையின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில், கபிணி அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. தற்போது திறக்கப்படும் உபரி நீரின் அளவு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் கபினி அணையில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு உபரி நீர் திறந்து விடப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.