சென்னை: சென்னை செங்குன்றத்தில் போலீஸ் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  செங்குன்றம் அடுத்த வடகரை பாபா நகர் அனெக்ஸ் பகுதி சேர்ந்தவர் சதீஷ் 35. இவர் சென்னை ராஜமங்கலம் போலீஸ் நிலையத்தில் போலீசாராக பணியாற்றி வந்தார். தனது பெற்றோருடன் வசித்துவந்த போலீஸ் சதீஷ் அப்பா அம்மாவுடன் தங்கி இருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று இரவு அவர் பிராந்தி பாட்டிலுடன் மயக்க நிலையில் இருந்தபோது கண்டறியப்பட்டார். அம்மா மலர் மணி வீட்டுக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.


போலீசார் வந்து பார்த்தபோது சம்பவ இடத்திலேயே சதீஷ் பரிதாபமாக இறந்து கிடந்தார். அவர் பூச்சி மருந்து கலந்து சாப்பிட்டு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.


மேலும் படிக்க | திருப்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு: குண்டர் சட்டத்தை எதிர்த்து கொள்ளையர்களின் மனு தள்ளுபடி


இதனை அடுத்து சடலத்தை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து எதனால் பிராந்தி பாட்டலுடன் விஷம் மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.


காவல் பணியின் போது அதிகாரிகள் டார்ச்சரா அல்லது திருமணம் ஆகவில்லை என ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்...


மேலும் படிக்க | Wild Buffalo Hunt: காட்டுப்பூனையை தூக்கி பந்தாடிய காட்டெருமை வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ