கோவை மாவட்டம் சோமனூர் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி தலை துண்டித்த நிலையில் இளம்பெண் சடலம் கிடப்பதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார், உடனடியாக போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த ரயில்வே போலீசார் பெண்னின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சம்பவ இடத்தில் கிடந்த  கைப்பையை சோதனையிட்டதில் அவர், கருமத்தம்பட்டி பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த ஜெபமலை ராஜ் என்பவரின் மகள் பிரசன்னா என்பதும், சோமனூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இளம்பெண் மதியம் பணிக்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்ததும் தெரியவந்துள்ளது.


மேலும் படிக்க | லண்டனில் வேலை வேண்டுமா? என்கிட்ட வாங்க: மோசடி ஆசாமி கைது


இதுகுறித்து பெண்ணின் பெற்றோருக்கு தகவல் அளித்த ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம் பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் மோதி இறந்தாரா என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR