தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத் உட்பட 11,967 பேர் அதிமுகவில் இணைந்தனர். இவர்கள் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர்களை வரவேற்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா உரையாற்றினார்:-


அப்போது, நீங்கள் வந்திருக்கும் இடம் நல்ல இடம். அரசியல் கட்சிகளிலேயே ஜனநாயகம் நிலவும் ஒரே கட்சி அதிமுகதான். நீங்கள் எந்த நம்பிக்கையுடன் கழகத்தில் இணைய வந்திருக்கிறீர்களோ அது ஒரு போதும் வீண் போகாது. அதிமுகவின் லட்சியம் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இல்லாமை இல்லாத நிலை வேண்டும். வளமான தமிழகத்தை படைத்து எல்லோரும் பயன்பெற வேண்டும். சிறந்த ஆட்சியை பெற வேண்டும் என்பதை உணர்ந்துதான் எனது தலைமையில் கழகப் பணியாற்ற வந்துள்ளீர்கள். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் எனக்கு நீங்கள் உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று பேசி தனது உரையை முடித்தார்.