சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடந்த மாதம் 20ம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது துப்பாக்கி, கத்தி, முகமூடி உள்ளிட்ட பொருட்களுடன் வந்த 2 வாலிபர்களை, போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் சேலம் மாநகரைச் சேர்ந்த நவீன் சக்ரவர்த்தி. சஞ்சய் பிரகாஷ் என்பதும், நண்பர்களான இருவரும் யூடியூப் சேனலை பார்த்து வீட்டிலேயே துப்பாக்கி தயாரித்ததும் தெரியவந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர்களிடமிகுந்த துப்பாக்கி கத்தி, முகமூடி மற்றும் துப்பாக்கி செய்வதற்கான உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஓமலூர் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்


இந்நிலையில், அவர்கள் எதற்காக துப்பாக்கி தயாரித்தார்கள், அவர்களுக்கும் ஏதேனும் அமைப்புகளுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக, நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்தனர். அதன் பேரில், அவர்கள் இருவரையும் 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.



இதைத்தொடர்ந்து, ஓமலூர் காவல் நிலையத்தில் வைத்து இருவரிடமும், கடந்த 2 நாட்களாக சேலம் மாவட்ட எஸ்பி, கியூபிரிவு டிஎஸ்பி ,காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். அதில் இருவரும் புரட்சியாளர்களாக மாறும் நோக்கத்தில், துப்பாக்கி தயாரித்ததாகவும், சாமானிய மனிதர்களில் இருந்து நீதிபதிகள் வரை தவறுகள் நடப்பதால், மனித மாண்புகளையும், இயற்கை மற்றும் அனைத்து உயிரினங்களையும் காக்கும் மனநிலையில் இருவரும் ஒன்று சேர்ந்ததாகவும் கூறியுள்ளனர்.


மேலும் படிக்க | 2026 தேர்தலில் பாஜக சார்பில் 150 எம்.எல்.ஏ.க்கள் வெல்வார்கள் - அண்ணாமலை நம்பிக்கை


மேலும் விடுதலைப்புலிகள் தலைவர்பிரபாகரன், சந்தனக்கடத்தல் வீரப்பன் ஆகியோர் வழியில் சாமானிய மக்களை காக்கும் நோக்கத்தில் புரட்சியாளர்களாக மாறுவதற்காக துப்பாக்கிகளை தயாரித்ததாக தெரிவித்துள்ளனர். அதற்காக ஒரு அமைப்பை உருவாக்கி, தங்களது கொள்கை பிடிப்பில் உள்ளவர்களை அதில் சேர்த்து, நன்மை செய்யும் அமைப்பாக செயல்படும். எண்ணத்தில் இருந்ததாக விசாரணையில் கூறியுள்ளனர்.



மேலும், நவீன் சக்ரவர்த்தியின் பள்ளி தோழனான சேலம் அகிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த கபிலர் என்ற வாலிபர் துப்பாக்கி தயாரிக்க துணையாக இருந்ததாக தெரிவித்துள்ளனர் இதையடுத்து கபிலரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 3 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பிரபாகரன், வீரப்பன் வழியில் துப்பாக்கி ஏந்த முயன்ற இளைஞர்கள் வீட்டிலேயே 
துப்பாக்கி தயாரித்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | இன்னைக்கு கட்சி தொடங்குறவன்லாம் நான்தான் முதல்வர்ன்றான் - யாரை சீண்டுகிறார் மு.க.ஸ்டாலின்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe