போதையில் ரகளை செய்த இளைஞரை தட்டி கேட்ட மூதாட்டியை, இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் என்கிற விக்கி. இவர் வயதான பாட்டியின் காதை அறுத்து நகை திருடியது தனது தந்தையையே கொலை செய்தது போன்ற தொடர் குற்றங்களில் ஈடுபட்டதால் குண்டர் தடுப்புச் சட்டம் காவலில் இருந்தவர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் சிறையிலிருந்து இவர் வெளி வந்துள்ளார்.



இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆஷா என்பவரின் மகள் ஆர்த்தியிடம் கடந்த 5 மாதத்திற்கு முன்பு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஆஷா மற்றும் அவரது மகள் ஆர்த்தியிடம் அவர் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.


மேலும் படிக்க | மனவளர்ச்சி குன்றிய மாணவியை அடித்து சூடு வைத்த ஆசிரியை!


விக்னேஷ் ஆஷாவின் மகள் ஆர்த்தியுடன் சண்டையிட்டு வந்த நிலையில் அப்பகுதியை சார்ந்த வேலாத்தா(64) என்பவர் இடையில் வந்து, விக்கியிடம் 'ஏன் தகராறில் ஈடுபடுகிறாய்' என்று கேட்டுள்ளார். இதனால் விக்கிக்கு மிகுந்த கோபம் வந்தது.


அப்போது போதை தலைக்கேறிய நிலையில் விக்கி தான் மறைத்து வைத்து இருந்த பட்டா கத்தியை எடுத்து வேலாத்தாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்.



இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆதம்பாக்கம் போலீசார்க்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விக்கி என்கிற விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க | மாவட்ட ஆட்சியரின் பெயரில் மோசடி செய்யும் மர்ம கும்பல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR