புதுடெல்லி: மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 1 மில்லியன் வேலைகளை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், விநியோகத்தை எளிதாக்குவதற்காக, அமேசான் இ-ரிக்‌ஷாக்களை இந்தியாவுக்குக் கொண்டுவரப் போகிறது. இவை அனைத்தும் முழுமையாக மின்சாரத்தால் இயங்கக்கூடியதாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்வதன் மூலம் பெசோஸ் அவர்களே இந்த தகவலைக் கொடுத்தார். வீடியோவில், பெசோஸ் தனது மற்ற சகாக்களுடன் ஒரு இ-ரிக்‌ஷாவை ஓட்டுவதைக் காணலாம். 


அந்த ட்வீட்டில், நாங்கள் புதிய மின்சார விநியோக ரிக்‌ஷாக்களை இந்தியாவில் தொடங்குகிறோம். இது முழு மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது. முற்றிலும் பூஜ்ஜிய கார்பன். மேலும் பெசோஸ் க்ளைமேட் பிளெட்ஜ் (#ClimatePledge) என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்துள்ளார். 


 



பெசோஸ் மூன்று நாள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.


அவர் இந்தியாவில் சிறு வணிகத்திற்காக 1 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யப் போவதாகக் கூறியுள்ளார். இதற்கு முன்பு, அமேசான் நிறுவனம் இந்தியாவில் 5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது. அமேசான் (Amazon) இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 1 மில்லியன் வேலைகளை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. 


இந்திய இ-காமர்ஸ் சந்தையில் அமசான் ஒரு முன்னணி நிறுவனம். அமேசானின் திருவிழா விற்பனை இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது,


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.