புது டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (வெள்ளிக்கிழமை) பொது மக்களுக்கு ஒரு நற்செய்தி தெரிவித்துள்ளார். வரும் காலத்தில் நிரந்தர கணக்கு எண் (PAN Card) பெறுவது எளிதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். என்ஐடிஐ ஆயோக்கில் தொழிலதிபர்களுடன் உரையாடும் போது அவர் இதை தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



2020-21ல் பட்ஜெட் அறிவிக்கப்பட்டது:
பிப்ரவரி 1 ஆம் தேதி மக்களவையில் முன்வைக்கப்பட்ட 2020-21 பொது பட்ஜெட்டில் பான் கார்டு பெறுவதற்கான செயல்முறையை எளிமைப்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார். இதற்காக உடனடியாக நிரந்தர கணக்கு எண் (Pan Card) வழங்குவதற்கான வசதி ஆதார் அடிப்படையில் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டது.


இந்த வசதி இந்த மாதத்தில் தொடங்குகிறது:
முன்னதாக, வருவாய் செயலாளர் அஜய் பூஷண் பாண்டே, இந்த மாதத்திலிருந்து ஆன்லைனில் பான் அட்டை தொடங்கப்படும் என்று கூறினார். ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியம். எனவே, நீண்ட மற்றும் பரந்த படிவத்தை நிரப்புவதில் இருந்து மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும்.


உங்கள் பான் அட்டையை ஏப்ரல் 1 க்கு பிறகு ரத்து செய்யலாம்:
பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதார் உடன் பான் இணைக்க அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. நாட்டில் 30.75 கோடிக்கும் அதிகமான பான் கார்டு வைத்திருப்பவர்கள் உள்ளனர். இருப்பினும், 27 ஜனவரி 2020 நிலவரப்படி, 17.58 கோடி பான் அட்டை வைத்திருப்பவர்கள் ஆதார் (Aadhaar) உடன் இணைக்கப்படவில்லை. இதன் காலக்கெடு 31 மார்ச் 2020 அன்று முடிவடைகிறது. அதாவது, மார்ச் 31 க்குள் உங்கள் பான் கார்டை ஆதார் உடன் இணைக்கவில்லை என்றால், ஏப்ரல் 1 க்குப் பிறகு உங்கள் பான் கார்டை ரத்து செய்யப்படலாம்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.