Honda Summer Bonanza: கார் வாங்க வேண்டும் என்ற ஆசை யாருக்குதான் இருக்காது. நடந்து செல்பவனுக்கு சைக்கிள் வாங்க வேண்டும் என்பதும், சைக்கிள் ஓட்டுபவனுக்கு பைக் வாங்க வேண்டும் என்பதும் பைக் ஓட்டுபவனுக்கு கார் வாங்க வேண்டும் என்பதும் வாழ்வில் வரும் இயல்பான மற்றும் அவசியமான ஆசைதான் எனலாம். எனவே, வாழ்வில் ஒரு குறிக்கோளை நோக்கி ஓடுவதில் எந்த தவறும் இல்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் கார் வாங்குவது என்பது அதிகம் செலவாகும் என்றாலும் சரியான திட்டமிடல் இருந்தால் நீங்கள் மாதத் தவணையில் கூட வாங்கலாம். இந்திய மத்திய நடுத்தர வர்க்கத்தினரின் கார் ஆசையை நிறைவேற்ற இந்த கார் லோன்கள் பெரும் உதவியாக இருக்கின்றன. இருப்பினும் சரியான சமயத்தில் தங்களுக்கு ஏற்ற கார் மாடல்களை தேர்வு செய்து வாங்குவது முக்கியமாகும். 


ஹோண்டாவின் ஆப்பர் 


காரை வாங்கும் முன்னர் அந்த காரின் முக்கிய அம்சங்கள் முதல் அதன் விலை அடுத்தடுத்து குறையுமா அல்லது விலை அதிகரிக்கிறது என்றால் எப்போதுக்குள் அதனை வாங்கலாம் என்பவற்றை அறிந்துவைத்திருப்பதும் உங்களின் பணத்தை மிச்சப்படுத்தும். அதுவும் கார் வாங்க நினைப்பவர்கள், நிறுவனங்களின் ஆப்பர்கள் மீது கண்கொத்தி பாம்பாக இருக்க வேண்டும். ஆப்பர் வந்தவுடன் அதனை கச்சிதமாக பயன்படுத்திக்கொள்ளவும் வேண்டும். அந்த வகையில், தற்போது ஹோண்டா நிறுவனம் அதன் கார்களின் மீது தள்ளுபடியும், ஆச்சர்யமளிக்கும் ஆப்பரையும் வழங்குகிறது. அதுகுறித்து விரிவாக இதில் காணலாம்.


மேலும் படிக்க | புதிய Maruti Swift Vs Tata Altroz : இரண்டுக்குமான விலை வித்தியாசம் இதுதான்..!


ஹோண்டா இந்தியாவில் முன்னணி கார் விற்பனை செய்யும் நிறுவனமாகும். இதன் கார்கள் இந்திய சந்தையில் குறிப்பிடத்தகுந்த அளவில் வரவேற்பை பெற்றவை ஆகும். அதில், ஹோண்டா நிறுவனம், Honda Summer Bonanza என்ற பெயரில் ஒரு மாத காலத்திற்கு ஆப்பர் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த ஆப்பரில் பரிசுகளும், சுற்றுலாவுக்கான ஏற்பாடும் இருக்கும். 


இந்த கார்களுக்கு மட்டும்


குறிப்பாக இந்த ஆப்பர் Honda City, Honda City e:HEV, Honda Amaze, Honda Elevate ஆகிய கார்களுக்கு மட்டுமே ஆகும். இந்த ஆப்பர் ஜூன் 1ஆம் தேதியான நேற்று முதல் வழக்கத்திற்கு வந்தது. மேலும், இந்த ஆப்பர் வரும் ஜூன் 30ஆம் தேதி மட்டுமே இருக்கும். அதாவது இந்த ஜூன் மாத முடிவு வரை நீங்கள் நாடு முழுவதும் உள்ள ஹோண்டா நிறுவனத்தின் கார் டீலர்களிடம் இந்த தள்ளுபடியில் மேற்கண்ட மாடல் கார்களை வாங்கிக்ககொள்ளலாம். 


இந்த ஆப்பர் மூலம் கார் வாங்குபவர்களுக்கு பிரத்யேகமாக இரண்டு பேருக்கு பாரீஸ் நகரத்திற்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமின்றி ரூ.75 ஆயிரம் வரை மதிப்பிலான உத்தரவாதம்  வாய்ந்த பரிசுகளும் வழங்கப்படுகின்றன. நீங்கள் கார்களை Test Drive செய்தால் கூட அதற்கு சர்ஃப்ரைஸ் கிப்ட் காத்திருக்கிறது. இவை அனைத்தும் இந்த ஆப்பரின் கீழ் வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள ஹோண்டா கார் ஷோரூம்களை அணுகவும். 


மேலும் படிக்க | புதிய பொழிவில் Splendor பைக்... மைலேஜை வாரிவழங்கும் காமதேனு... விலை என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ