இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மொபைல் பயனர்களுக்கு நிவாரணம் மிக்க ஒரு செய்தியை அளித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு SIM-லிருந்து தினமும் 100 SMS அனுப்பும் FUP வரம்பை TRAI  ரத்து செய்துள்ளது. மேலும் 100 SMS பின்னர் அனுப்பப்பட்ட SMS மீதான 50 பைசா கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து இனி தினமும் 100-க்கும் மேற்பட்ட SMS செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


READ | மொபைல் பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி... TRAI-ன் முக்கிய அறிவிப்பு...


SMS-கான கட்டண விதிமுறை தொடர்பாக 'தொலைத்தொடர்பு கட்டண (65-வது திருத்தம்) ஆணை 2020' என்ற வரைவை TRAI  வெளியிட்டுள்ளது. 100 SMS தினசரி வரம்பிற்குப் பிறகு 50 பைசா கட்டணத்தை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று TRAI  நம்புகிறது, ஏனெனில் ஸ்பேம் SMS கண்டறிய போதுமான தொழில்நுட்பம் இப்போது உள்ளது.


  • 2012-ல் நடைமுறைக்கு வந்த விதி


இப்போது வரை, தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் தினசரி 100 SMS வரம்பிற்குப் பிறகு ஒரு SMS ஒன்றுக்கு குறைந்தது 50 பைசா வசூலிக்கிறார்கள். இந்த விதி 2012 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. UCC (கோரப்படாத வணிக தொடர்புகள்) இலிருந்து தொலைதொடர்பு சந்தாதாரர்களைப் பாதுகாக்க TRAI  தினசரி 100 SMS வரம்பை நிர்ணயித்திருந்தது. இது தவிர, சில ஆண்டுகளுக்கு முன்பு TRAI பயனர்களுக்கான DND சேவையையும் தொடங்கியது. இந்த சேவையின் மூலம், பயனர்கள் தங்கள் எண்களில் விளம்பரம் தொடர்பான செய்திகளை நிறுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


  • தொழில்நுட்ப தீர்வுகளுக்கு முக்கியத்துவம்


ஸ்பேம் SMS தடைசெய்ய புதிய வழிகளை அறிமுகப்படுத்த நிறுவனங்களை TRAI வலியுறுத்துகிறது. 2017-ஆம் ஆண்டில், UCC-யை தடை செய்ய TCCCPR-யை TRAI அறிமுகப்படுத்தியது. இதுகுறித்து TRAI  கூறுகையில் 'TCCCPR 2018-ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பு தொழில்நுட்பம் சார்ந்ததாகும். இந்த ஸ்பேம் SMS கட்டுப்படுத்த முடியும். உண்மையில், ஸ்பேம் SMS தடை செய்ய TRAI 50 பைசா கட்டணம் விதித்தது. இந்த கட்டணம் TCCCPR (டெலிகாம் கமர்ஷியல் கம்யூனிகேஷன்ஸ் வாடிக்கையாளர் விருப்பத்தேர்வுகள்) இன் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட்டது. எனினும், அது இப்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.


READ | இந்தியாவில் 11 இலக்க மொபைல் எண்ணைப் பயன்படுத்த TRAI பரிந்துரை...


இந்த முடிவை செயல்படுத்த, TRAI தொலைத்தொடர்பு கட்டண (65 வது திருத்தம்) உத்தரவு, 2020-ஐ உருவாக்கியது. இந்த ஆண்டில், SMS தொடர்பான பொருந்தக்கூடிய விதிகளை திரும்பப் பெற முன்மொழியப்பட்டது. தினசரி 100 SMS, அதன் பின்னர் அனுப்பப்படும் SMS-க்கு 50 பைசா கட்டணத்தை நீக்க TRAI முன்மொழிந்தது என்பதே இதன் பொருள். இதற்காக, மார்ச் 3-ஆம் தேதிக்குள் பங்குதாரர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ கருத்துக்களையும், மார்ச் 17-க்குள் எதிர் கருத்துகளையும் TRAI  கேட்டுக் கொண்டது. இதற்குப் பிறகுதான், TRAI  இந்த முடிவை எடுத்துள்ளது.