மிகவும் சர்ச்சைக்குறிய விஷயங்களால் உலக மக்கள் கவணத்தினை ஈர்த்த VietJet Airways விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வியட்நாம் பிகினி Airways என்று அழைக்கப்படும் VietJet Airways, விரைவில் வியட்நாம் தலைநகர் ஹோ சி மின் நகரத்திலிருந்து புதுடெல்லிக்கு இடையே தங்களது விமான சேவையினை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.


கடந்த 2012-ஆம் ஆண்டு தனது நிறுவன ஊழியர்களினை பிகினி-உடையில் கொண்டு வருடாந்த நாள்காட்டி வெளியிடப்பட்டது. இதனால் இந்த விமான நிறுவனத்தின் மீது பெரும் சர்ச்சைகள் கிளம்பியது. எனினும் இவ்விமான நிறுவனம் எந்த சலனமும் இல்லாமல் மீண்டும் தங்களது ஊழியர்களை கொண்டு Fasion நிகழ்ச்சிகளையும் நடத்தியது. இத்தகு நிகழ்வுகளால் VietJet Airways மிகவும் பிரபலமானது.



இந்நிலையில் தற்போது இந்நிறுவனம் வரும் ஜூலை மாதத்தில், இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து வியாட்நாம் தலைநகர் ’ஹோ சி மின்’-க்கு நேரடி விமான சேவையினை துவங்கு உள்ளதாக தெரிவித்துள்ளது!