ஜல்லிக்கட்டுக்கான தடைகளை நீக்க வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்று கூடி போராட்டம் நடத்திவருகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனிடையில் எங்களுக்கும் தமிழ் கலாசாரம் மீது பற்று உள்ளது என உறுதியாக நிரூபிக்கும் வகையில் அமெரிக்கா, துபாய், அயர்லாந்து, வர்ஜீனியா, மெக்ஸிகோ, சிகாகோ, தென் கொரியா, பாங்காக், ரஷ்யா, மலேசியா, பிலிப்பீன்சு, உக்ரைன் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


இங்கு வாழும் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு திரண்ட பலர் அமைதியான முறையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், தடை அதை உடை போன்ற கோஷங்களை எழுப்பியும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.


இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.