அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பெர்னார்டினோ நகரில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 வயது குழந்தை உட்பட 4 பேர் பலியாகினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சான் பெர்னார்டினோ நகரில் உள்ள தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியையின் கணவர், மனைவி மீதுள்ள ஆத்திரத்தினால், பள்ளிக்குள் புகுந்து சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் படுகாயம் அடைந்த 9 வயது மாணவர் கவலைக்கிடமான வகையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். 


இந்த தாக்குதலைத் தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் கழித்து மற்ற குழந்தைகள் அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். 


மேலும், தற்கொலை செய்துக் கொண்ட ஆண்டர்சன் மீது சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தது, மனைவியை கொடுமைப்படுத்தியது, போன்றவற்றில் குற்றம்சாட்டப்பட்டவர் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலை தொடர்ந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் பள்ளி தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.