Bizarre News In Tamil: பாம்பை பார்த்தால் படையே நடுங்கும் என்ற பழமொழியை பலர் சொல்லி நீங்கள் கேட்டிருப்பீர்கள். பாம்பை நீங்களே நேரடியாக பார்த்தாலும் உடனே பதற்றமாவீர்கள். அது விஷத்தன்மை உடையதா அல்லது விஷத்தன்னை இல்லாததா என்பது உறுதியாகவிட்டாலும் சரி பாம்பை கண்ட உடன் நிச்சயம் அச்ச உணர்வு மேலெழுந்துவிடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய மழை காலத்தில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் கூட பாம்புகள் வரும் தகவல்களையும், பாம்பு கடிப்பதால் பலர் உயிரிழக்கும் தகவல்களையும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வகையில், தாய்லாந்து நாட்டில் ஒருவருக்கு பாம்பால் அதுவும் மலை பாம்பால் ஏற்பட்ட பகீர் நிகழ்வு கேட்போரை அதிர்ச்சிக்குள்ளாக வைத்துள்ளது. அந்த சம்பவம் குறித்து, அதில் பாதிக்கப்பட்டவர் பகிர்ந்துகொண்ட தகவல்களையும் இங்கு காணலாம். 


தாய்லாந்தில் பகீர் சம்பவம்


தாய்லாந்து நாட்டின் சமுத் பிரகான் மாகாணத்தைச் சேர்ந்தவர் தனத் தங்தேவனோன். இவர் தனக்கு நடந்த அந்த அதிர்ச்சி சம்பவத்தை புகைப்படங்கள், வீடியோக்கள் உடன் பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட பின்னரே இது பொதுவெளிக்கு வந்தது. இந்த சம்பவம் கடந்த ஆக.20ஆம் தேதி அன்று நடந்ததாகவும் தனத் கூறியுள்ளார். 


மேலும் படிக்க | உக்ரைனுக்கு மோடி ரயிலில் செல்ல காரணம் என்ன? Rail Force One சிறப்பம்சங்கள் என்னென்ன?


ஆக. 20ஆம் தேதி அன்று தனத் தனது வீட்டின் கழிவறையை பயன்படுத்திக்கொண்டிருந்த போது, அவரது பிறப்புறப்பின் விதைப்பைகளில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. மேற்கத்திய வடிவத்திலான கழிவறையில் அவர் அமர்ந்திருந்தபோது அவருக்கு இந்த திடீர் வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனத் அந்த பதிவில்,"ஏதோ ஒன்று என்னை கடிப்பது போல் இருந்தது. அது மிகவும் வலித்தது, உடனே கழிவறைக்குள் கையை விட்டு என்னவென்று பார்க்க நினைத்தேன். நான் பாம்பை பிடித்ததை பார்த்ததும் நான் அதிர்ச்சியாகிவிட்டேன்" என குறிப்பிட்டுள்ளார். 


பாதிக்கப்பட்டவரின் பேஸ்புக் பதிவு