புது டெல்லி: தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை லாகூர் உயர்நீதிமன்றம் திருப்பி அனுப்பியது. முன்னதாக டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி தேசத் துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. 167 பக்கம் கொண்ட அந்த தீர்ப்பில், ஒருவேளை மரண தண்டனைக்கு முன்பாகவே முஷாரஃப் இறந்து விட்டால், அவரது உடலை "இஸ்லாமாபாத்தின் டி-சவுக் பகுதியில் மூன்று நாட்களுக்கு தூக்கில் தொங்கவிட வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முஷாரஃபுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு:
ரசியல் சட்டத்தை முடக்கி வைத்து நெருக்கடி நிலையை அமல்படுத்தியதாக முஷாரபுக்கு எதிராக தொடரப்பட்ட தேச துரோக வழக்கில் அவர் குற்றம் செய்திருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. எனவே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. பாகிஸ்தான் அரசியலமைப்பின் 6 வது பிரிவின்படி முஷாரஃப் உயர் தேசத் துரோக குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு உள்ளது.


குற்றம் சாட்டப்பட்டவர் (பர்வேஸ் முஷாரஃப்) குற்றவாளியாகக் காணப்படுகிறார். அவர் மீதுள்ள குற்றச்சாட்டின் படி, அவர் உயிருடன் இருந்தாலும் அல்லது இறந்தாலும் அவரது தூக்கிலிடப்படுவார் என்று தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டு உள்ளது. 


அதாவது தற்போது பர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தானில் இல்லை. அங்கிருந்து தப்பியோடி அவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இதனால் தப்பியோடி அவரை கைது செய்யும் போது ஒருவேளை இறந்து விட்டால், சட்டத்தின்படி தண்டனை விதிக்கப்பட்டத்தை உறுதி செய்வதற்கு, அவரது சடலத்தை பாகிஸ்தானின் டி-சவுக் பகுதில் தூக்கிலிடப்பட வேண்டும் என்று சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. முஷாரப்பின் சடலத்தை தூக்கிலிட வேண்டும் என தீர்ப்பு எழுதியது நீதிபதி சேத் ஆவார்.


துபாயில் பர்வேஷ் முஷாரப்:
எட்டு ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்த பர்வேஷ் முஷாரப்பிற்கு தேசத் துரோக வழக்கில் பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. டிசம்பர் 3, 2007 அன்று, அவசரகாலத்தை அமல்படுத்தியதற்காக முன்னாள் ஜனாதிபதி மீது 2013 டிசம்பரில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. முஷாரஃப் 31 மார்ச் 2014 அன்று குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதோடு, அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு முழு ஆதாரங்களையும் அளித்தது. முஷாரஃப் 2016 மார்ச் மாதம் பாகிஸ்தானை விட்டு வெளியேறினார். தற்போது துபாயில் வசித்து வருகிறார்.


பர்வேஸ் முஷாரப்புக்கு எதிரான வழக்கை சிந்து உயர்நீதிமன்றத்தின் (எஸ்.எச்.சி) பெஷாவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகர் அகமது சேத் அக்பர் மற்றும் லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதி ஷாஹித் கரீம் ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் விசாரித்து வந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பெஞ்ச் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.