அமெரிக்காவில் திருடன் என்று நினைத்து மனைவியை சுட்டுக்கொன்ற கணவர் கைது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கோல்ட்ஸ்போரோ நகரை சேர்ந்தவர் பில்லி வில்லியம்ஸ் (49). இவரது மனைவி ஜினா வில்லியம்ஸ் (48).இவர் தொழிற்சாலையில் பணிபுரிந்தார். எனவே பணி முடிந்து இரவில் வீடு திரும்பினார். கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார். அப்போது கண் விழித்த பில்லி வில்லியம்ஸ் வீட்டிற்குள் திருடன் புகுந்து விட்டான் என தவறாக நினைத்து விட்டார். பின்னர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் ஜினா வில்லியமை நோக்கி சுட்டார். அதில் அவரது கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.


இதனால் அலறிய அவர் வீட்டு வாசலில் ரத்த வெள்ளத்தில் விழுந்து பரிதாபமாக இறந்தார். அப்போது அவரது 2 குழந்தைகளும் வீட்டில் இருந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவரை கைது செய்து கைத்துப்பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது.