TikTok Ban: பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்த நிலையில், நியூசிலாந்து நாடும் டிக்டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தத் தடை, சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் பொருந்தும். நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சாதனங்களில் இருந்து டிக்டாக் தடை செய்யப்படுகிறது. மார்ச் 31-ம் தேதி முதல் இந்தத் தடை அமலுக்கு வருகிறது.


சீனாவுக்குச் சொந்தமான சமூக ஊடக செயலியான டிட்டாக் ஏப் தடை தொடர்பாக நியூசிலாந்து நாட்டு அதிகாரிகள் செய்தி ஊடகம் AFP க்கு நேற்று (மார்ச் 16, வெள்ளிக்கிழமை) தெரிவித்தனர், இது தளத்தைப் பற்றிய பாதுகாப்பு அச்சங்களை வெளிப்படுத்தும் சமீபத்திய மேற்கத்திய நாடாக மாறும்.


நாடாளுமன்ற நெட்வொர்க்கிற்கான அணுகல் உள்ள அனைத்து சாதனங்களிலும் TikTok தடைசெய்யப்படும் என்று பாராளுமன்ற சேவையின் தலைமை நிர்வாகி ரஃபேல் கோன்சலஸ்-மான்டெரோ தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | அமெரிக்காவைத் தொடர்ந்து TikTok செயலி மீது தடை விதித்த பிரிட்டன்!


அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள், பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்தன. அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கணினி, தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்டாக் செயலியை வைத்திருக்க, இந்த நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அரசு தொலைபேசிகளில் டிக்டோக்கை தடை செய்வதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. 


"அரசின் முக்கியத் தகவல்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கே முன்னுரிமை, எனவே இன்று நாங்கள் இந்த செயலியை அரசு சாதனங்களில் தடை செய்கிறோம். தரவுப் பிரித்தெடுக்கும் பிற செயலிகளின் பயன்பாடுகளும் மதிப்பாய்வு செய்யப்படும்" என்று பிரிட்டன் அமைச்சரவை விவகார அமைச்சர் ஆலிவர் டவுடன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள செயலிகளை மட்டுமே அரசு அலுவலக செல்போன்களில் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.


மேலும் படிக்க | மீண்டும் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து... தொடரும் தேடுதல் பணி!


பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட பைட் டான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான செயலியின் பயனர் தரவு சீன அரசாங்கத்தின் வசம் செல்வதாக கூறப்படும் நிலையில், உலகின் பல நாடுகள் டிக்டாக் செயலியை தடை செய்து வருகின்றன. 


சாதனங்களில் டிக்டோக்கைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது இணைய பாதுகாப்பு நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்றி எடுக்கப்படும் முடிவுகளாக இருக்கிறது.


ஆனால், "இந்தத் தடைகள் தவறான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் பரந்த புவிசார் அரசியலால் இயக்கப்படுகின்றன என்று நாங்கள் நம்புகிறோம், இதில் TikTok மற்றும் இங்கிலாந்தில் உள்ள எங்கள் மில்லியன் கணக்கான பயனர்கள் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை" என்று TikTok செய்தித் தொடர்பாளர் கூறினார்.


மேலும் படிக்க | பலுசிஸ்தானில் ஒரு ‘புல்வாமா’ தாக்குதல்! 9 போலீசார் படுகொலை! 13 பேர் படுகாயம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ