Iceland Earthquakes: ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்காவிக் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,200 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஐஸ்லாந்திய வானிலை அலுவலகம் (IMO) உடனடி எரிமலை வெடிப்பு பற்றிய கவலையை எழுப்புகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"சுமார் 2,200 நிலநடுக்கங்கள் கண்டறியப்பட்டுள்ளன மற்றும் ஐஸ்லாந்தின் தென்மேற்கு பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன" என்று வானிலை அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளது. அறிக்கைகளின்படி, ஏழு நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் நான்குக்கு மேல் பதிவாகியுள்ளன. இவை லேசான நிலநடுக்கமாக கருதப்படுகிறது. நில அதிர்வு நடவடிக்கையின் விளைவாக விமான எச்சரிக்கை 'பச்சை' நிறத்தில் இருந்து 'ஆரஞ்சு' ஆக உயர்த்தப்பட்டது.


ஐஸ்லாந்து அதன் வியத்தகு எரிமலை நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றது. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆக்டிவான எரிமலைப் பகுதியாகும். இது மத்திய-அட்லாண்டிக் பகுதியில் அமைந்துள்ளது, இது யூரேசிய மற்றும் வட அமெரிக்க டெக்டோனிக் தட்டுகளை பிரிக்கும் புவியியல் அம்சமாகும்.


ஐஸ்லாந்தின் எரிமலை செயல்பாட்டின் காரணமாக உலகளாவிய கவனம் ஐஸ்லாந்தின் பக்கம் திரும்பியது. 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில், ஃபாக்ரடால்ஸ்ஃப்ஜால் மலைக்கு (Mount Fagradalsfjall) அருகில் எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்தன. இது நூறாயிரக்கணக்கான சுற்றுலா பார்வையாளர்களை ஈர்த்தது, அவர்கள் செயலில் உள்ள எரிமலையை நெருக்கமாகக் காணும் அரிய வாய்ப்பைத் தேடி அலைந்ததாகவும் கூறப்படுகிறது.


2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சுமார் 1 லட்சம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, இதனால் 10 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் சிக்கித் தவித்தனர். Eyjafjallajokull எரிமலையின் பாரிய வெடிப்புக்குப் பிறகு - கோவிட் தொற்றுநோய் வரை அமைதி காலத்தில் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து இடையூறு இருந்தது. 


மேலும் படிக்க | வாடகைக்கு அப்பாக்களை எடுக்க சிறப்பு வசதி! இது நல்லா இருக்கே!


நிலநடுக்கங்கள் இன்றைய நிலநடுக்க வரைபடங்களால் பதிவு செய்யப்படுவதற்கு முன்பே, பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் உள்ள பல்வேறு நகரங்களில் ஏற்பட்ட பூகம்பங்கள் பற்றிய அறிக்கைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்பது ஆச்சரியம் அளிப்பவையாக உள்ளது. 19ஆம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்தில், 'நிலநடுக்கவியல்' (seismology) என்ற வார்த்தையை கட்டமைத்த பெருமைக்குரிய ஐரிஷ் விஞ்ஞானி ராபர்ட் மாலெட் ஆவார். இவர் இந்த அறிக்கைகளின் அடிப்படையில் பூகம்ப வரைபடங்களை உருவாக்கினார். பிரிட்டனுக்கு இடைநிலை நில அதிர்வு இருப்பதை அவர் கவனித்தார், இது அயர்லாந்தில் குறைந்த நில அதிர்வு இருப்பதையும் கண்டறிந்தது.


1884ஆம் ஆண்டில், ஐரிஷ் நில அதிர்வு நிபுணர் ஜோசப் ஓ'ரெய்லி பிரிட்டன் மற்றும் அயர்லாந்தின் முதல் நில அதிர்வு வரைபடத்தை வெளியிட்டார். அதில், பிரிட்டன் அயர்லாந்தை விட பூகம்ப நடவடிக்கைக்கு மிகவும் உட்பட்டது என்று வலியுறுத்தினார்.


இந்த சீரற்ற விநியோகத்தின் பின்னணியில் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்வது இன்று முக்கியமானது, குறிப்பாக இது பிரிட்டனின் வளர்ந்து வரும் மக்கள்தொகையை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். 2011 மற்றும் 2021 ஆண்டுகளுக்கு இடையில், பிரிட்டன் மக்கள் தொகை 6 சதவீதம் மட்டுமே அதிகரித்து. அங்கு மொத்தம் 67 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.


உலகின் மிகப்பெரிய நிலநடுக்கங்களில் 80% க்கும் அதிகமானவை பசிபிக் பெருங்கடலின் சுற்றளவைச் சுற்றி நிகழ்கின்றன - இது பசிபிக் "Pacific Ring of Fire" என்று அழைக்கப்படுகிறது.


மேலும் படிக்க | 21 வயது முன்னாள் காதலியை உயிருடன் புதைத்த இந்திய இளைஞர்... ஆஸ்திரேலியாவில் ஆயுள் தண்டனை
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ