Rocker Brocarde தனது பேய் காதலன் எட்வார்டோ என்பவரை கடந்த ஆண்டு ஹேலோவின் சமயத்தில் பாழடைந்த தேவாலயம் ஒன்றில் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டார். இவர் இறந்த எட்வார்டோ என்பவரின் ஆவியை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக திகில் கிளப்பினார். கிட்டதட்ட 5 மாதங்கள் காதலித்து அவரது ஆன்மாவை பிடித்த பிறகே திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். திருமணத்துக்குப் பிறகு Barry Island-க்கு ஹனிமூனும் சென்று ஜாலியாக இருந்துள்ளார். இப்படி நன்றாக இருந்த இவரது வாழ்க்கை இப்போது சிக்கலில் சிக்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது கண்ணுக்கே தெரியாத ஆவி கணவர் தன்னை மிகவும் துன்புறுத்துவதால், அவரிடம் இருந்து விவாகரத்து பெற தீவிரம் காட்டி வருகிறார். அதோடு, பேய் ஓட்டுபவர்களின் உதவியையும் நாடியுள்ளார்.


தான் எங்கு சென்றாலும் எட்வார்டோ ஆவி பின் தொடர்வதாகவும், அவர் குயின் விக்டோரியா காலத்து போர் வீரர் என்றும் பல திகில் தகவல்களை அடுக்கிக்கொண்டே செல்கிறார். அதாவது 1830-களில் வாழ்ந்த போர் வீரரின் ஆவியை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். 



மேலும் படிக்க | மிரட்டும் சீனா... தலைவணங்காத தைவான்... போர் மூளும் அச்சம்!


ஆவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு தான் அவரின் உண்மை முகம் தெரிந்துள்ளதாம். தினமும் தன்னை எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து பயமுறுத்துவதுடன், குழந்தைகள் கதறி அழும் சத்தத்தை தனது காதுகளில் எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் படி செய்து தொல்லை கொடுத்து வருகிறாராம். 


இனியும் ஆவி கணவருடன் வாழ முடியாது என்பதால் சட்டப்படி விவாகரத்து பெற அரசின் உதவியையும் நாடி உள்ளார். அதோடு பேய் ஓட்டுபவர்களை வைத்தும் கணவனை விரட்டி அடிக்க முயற்சித்து வருகிறார் Rocker Brocarde. தனியார் இதழுக்கு பேட்டி அளித்த அவர், எனது எல்லையும் இறுதியை அடைந்துவிட்டேன். ஆவியை காதலித்து திருமணம் செய்தது சரிவரவில்லை. ஆனால் என் தோல்வியை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். விவாகரத்து பெற்று ஜெயித்து காட்டுவேன் என பேசியுள்ளார். 



தனது ஆழ்ந்த இருண்ட எண்ணங்கள் மூலம் தன்னை தனது ஆவி கணவர் மிகவும் துன்புறுத்துவதாகவும் ஆஸ்திரேலிய பாடகி வேதனை தெரிவித்துள்ளார். பலமுறை திருமண பந்தத்தை சீரியசாக எடுத்துக்கொள்ளும் படி சொல்லியும், பலனில்லை என்றும், இனியும் இந்த டார்சர்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறுகிறார். பேய் கணவர் தற்போது தன்னையே வேட்டையாடுவதாகவும் பேசி இருக்கிறார். 


ஆரம்பத்தில் பேய் - ஆவி மீதெல்லாம் நம்பிக்கை இல்லாமல் இருந்ததாகவும், ஆனால் கடந்த ஆண்டு தனது பெட்ரூமில் முதல்முறையாக எட்வொர்டோவின் ஆவியை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். இவரது பேட்டிகளும், இன்ஸ்டா பதிவுகளும் இப்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. தென் கொரியாவில் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை பலரும் திருமணம் செய்து வருகின்றனர். தலையனை, சோபா, பொம்மை என பலவற்றை கொரியன் மக்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஆனால் உலகிலேயே பெண் ஒருவர் ஆவியை காதலித்து திருமணம் செய்வது இதுவே முதல்முறையாக என்கின்றனர் நெட்டிசன்கள். ஆவி கணவரால் Barry Island மன உளைச்சலில் தவித்து வரும் நிலையில், இப்படி பெண்கள் எல்லாம் ஆவியை திருமணம் செய்து கொண்டால் நாங்கள் எங்கே செல்வது என புலம்பித் தள்ளுகின்றனர் சிங்கிஸ் பாய்ஸ். 


மேலும் படிக்க | மதுவிற்கு அடிமையான ‘குடிகார’ நாய்! ‘சரக்கு’ கிடைக்காமல் தவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ