பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் முனஜ்ஜா ஜிலானி எதிரான பாலியல் குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சவூதி அரேபியாவில் செய்தி சேகரிக்கச் சென்ற தனக்கு, வாட்ஸ்- அப் மூலமாக பாலியல் தொந்தரவு கொடுத்தார் என ஜிலானி என்ற பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் குற்றச்சாட்டினார். 


இதைக்குறித்து விளக்கம் அளிக்க இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திடம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது. இதுதொடர்பாக ஆராய்ந்த இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது:- 


பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்பட்ட நபர் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை சேர்ந்தவர் அல்ல. அவர் ஒரு தனியார் ஊடக செய்தியாளர். இதை தெரிந்த ஜிலானி இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வேண்டும் என்றே குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதனால் கிரிக்கெட் நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.