கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையையுடன் வெற்றி பெற்றுள்ளனர். வெள்ளிக்கிழமை அதிகாலை வெளியிடப்பட்ட முடிவுகள், அரசியலமைப்பில் பெரும் மாற்றங்களைச் செய்வதற்கான அதிகாரத்தை அவருக்கு அளித்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், ஆளும் இலங்கை பொதுஜன பெருமானா கட்சியும் (SLPP) அதன் கூட்டுக் கட்சிகளும் 150 இடங்களை வென்றுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை இலங்கையில் (Sri Lanka) நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.


அதிபர் பதவிக்கான முழு நிர்வாக அதிகாரங்களையும் பெற தங்கள் கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற வேண்டும் என ராஜபக்சே கோரியிருந்தார். அப்போதுதான் நாட்டை பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் பாதுகாப்பாக மாற்றுவதற்கான தனது திட்டங்களை எந்த இடையூறுமின்றி செயல்படுத்த முடியும் என்று அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.


முன்னதாக, இலங்கையில், கோவிட் -19 தொற்று நோய்க்கு மத்தியில் நடத்தப்பட்ட தேர்தல் (General Elections) புதன்கிழமை அமைதியான முறையில் நடந்து முடிந்தது. 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இதில் வாக்களித்ததாக தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியா தெரிவித்தார். வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியவுடன், SLPP நிறுவனர், தேசிய அமைப்பாளர் மற்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே, தங்கள் கட்சி புதிய அரசாங்கத்தை உருவாக்கத் தயாராக உள்ளது என்று கூறினார்.


அதிபர் கோத்தபயா மற்றும் பிரதமர் மஹிந்தா தலைமையில் பொருளாதாரத்தை புதுப்பிக்க முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.


ALSO READ: இலங்கை தேர்தல்கள்: வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் வெற்றிக்கான நம்பிக்கையுடன் SLPP