அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த செனைடா மரிய சோடா (23) என்ற இளம்பெண், கடந்த நவ. 20ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் அவரின் காதலன் உள்பட குடும்பத்தினர் யாரும் இல்லாத நேரத்தில், காதலனின் வீட்டில் புகுந்து, வீட்டிற்கு தீ வைத்தது மட்டுமின்றி சில பொருள்களையும் திருடிச் சென்றுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைத்தொடர்ந்து, சோடைவை போலீசார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார்,"சோடா அவரின் காதலருக்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது அந்த அழைப்பை வேறொரு பெண் எடுத்துள்ளார். இதனால், கோபமடைந்த சோடா, காதலனின் வீடு புகுந்து சோபாவில் தீ வைத்துள்ளார். உடனடியாக வீடு முழுவதும் தீ பரவிவிட்டது. 


மேலும் படிக்க | தந்தைக்கு உல்லாச அழகிகளை விருந்தாக்கிய மகள்... 100ஆவது பிறந்தநாளுக்கு பரிசு!