7th Pay Commission: DA, DR உயர்வு எப்போது? வெளியான சூப்பர் அப்டேட்!

ஃபிட்மென்ட் காரணி என்பது அடிப்படை சம்பளத்தால் பெருக்கப்படும் பொதுவான மதிப்பாகும், ஃபிட்மென்ட் காரணி தற்போது 2.57 ஆக உள்ளது, இதனை 6வது மத்திய ஊதியக் குழு 1.68 ஆக நிர்ணயித்தது.   

Written by - RK Spark | Last Updated : Dec 8, 2022, 07:06 AM IST
  • ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்வு.
  • 18 மாத நிலுவைத் தொகையை வழங்குவது குறித்தும் முடிவு.
  • ஃபிட்மென்ட் காரணியில் திருத்தத்தை மேற்கொள்ள உள்ளது.
7th Pay Commission: DA, DR உயர்வு எப்போது? வெளியான சூப்பர் அப்டேட்! title=

இந்த 2022ம் ஆண்டின் மார்ச் மாதம், மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (டிஏ) 3 சதவீதம் அதிகரித்தது. அதன்மூலம் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்ந்து அவர்களின் அடிப்படை சம்பளத்தில் உயர்வு ஏற்பட்டது.  இந்நிலையில் மத்திய அரசு அகவிலைப்படி(டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம்(டிஆர்) மற்றும் ஃபிட்மென்ட் காரணி ஆகியவற்றில் திருத்தத்தை மேற்கொள்ளும் என்றும், மேலும் ஊழியர்களின் கணக்கில் 18 மாத நிலுவைத் தொகையை வழங்குவது குறித்தும் நல்ல முடிவை எடுக்கும் என்றும் எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அசத்தல் செய்தி: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியத் திட்டம்? 

அடுத்த ஆண்டில் அதாவது 2023ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் அகவிலைப்படி(டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம்(டிஆர்) ஆகிய இரண்டும் 3 முதல் 5 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் ஊழியர்களுக்கு 2023ம் ஆண்டின் ஜனவரி மாதத்திலிருந்தே பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.  பணவீக்கத்தை பொறுத்து அகவிலைப்படி உயர்த்தப்படும், பணவீக்கம் 6 சதவீதம் இருப்பதால் அதனை பொறுத்து அகவிலைப்படி உயர்த்தப்படும்.

சிபிஐ குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அலவன்ஸ்கள் திருத்தியமைக்கப்படுகிறது, இந்த திருத்தத்தின் முடிவு மார்ச் அல்லது செப்டம்பரில் அறிவிக்கப்படும்.  ஃபிட்மென்ட் காரணி என்பது அடிப்படை சம்பளத்தால் பெருக்கப்படும் பொதுவான மதிப்பாகும், ஃபிட்மென்ட் காரணி தற்போது 2.57 ஆக உள்ளது, இதனை 6வது மத்திய ஊதியக் குழு 1.68 ஆக நிர்ணயித்தது.  தற்போது ஃபிட்மென்ட் காரணியை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்று ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர், இது ரூ.18,000-லிருந்து ரூ.26,000 ஆக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதுதவிர ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிலுவையில் உள்ள அகவிலைப்படி பிரச்சினையும் தீர்க்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: 2023-ல் ஊழியர்களுக்கு ஜாக்பாட், 5% அதிகரிக்குமா டிஏ? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News