73 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு EPFO அளித்த பரிசு

EPFO launches Face Authentication:  ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப்ஓ ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 1, 2022, 06:56 PM IST
  • ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப்ஓ ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது.
  • ஓய்வூதியதாரர்களுக்கு முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எங்கிருந்தும் டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் வசதியைத் தொடங்கியுள்ளது.
  • ஓய்வூதியத்திற்காக டிஜிட்டல் லைஃப் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
73 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு EPFO அளித்த பரிசு title=

இபிஎஃப்ஓ முக அங்கீகாரத்தை அறிமுகப்படுத்துகிறது: ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப்ஓ ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தனது 73 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எங்கிருந்தும் டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் வசதியைத் தொடங்கியுள்ளது. வாழ்க்கைச் சான்றிதழை (ஜீவன் பிரமாண் பத்ரா) தாக்கல் செய்வதற்காக முதுமை காரணமாக பயோமெட்ரிக் (கைரேகை மற்றும் கருவிழி) சேகரிப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளும் வயதான ஓய்வூதியதாரர்களுக்கு முக அங்கீகார சரிபார்ப்பு உதவியாக இருக்கும்.

ஓய்வூதியத்திற்காக டிஜிட்டல் லைஃப் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான முக அங்கீகார தொழில்நுட்ப வசதியை துவக்கி வைத்ததாக தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெற, ஆண்டுக்கு ஒரு முறை ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் உயிருடன் இருப்பதற்கான சான்று வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | EPFO Pension: ஓய்வூதிய கொள்கையில் மாற்றம்! புதிய விதிகளை தெரிந்துகொள்ளுங்கள்! 

EDLI திட்ட கால்குலேட்டரின் வசதி

முன்னதாக, இபிஎஃப்ஓ-​​இன் உச்ச அமைப்பான மத்திய அறங்காவலர் குழு (சிபிடி), அதன் 231 ஆவது கூட்டத்தில், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான இபிஎஃப்ஓ ​​சேவைகளை மேலும் மேம்படுத்த, ஓய்வூதியத்தை மையப்படுத்திய விநியோகத்திற்கான முன்மொழிவுக்கு கொள்கையளவில் ஒப்புதல் அளித்தது. அதன் விளைவு பல்வேறு நிலைகளில் இருக்கும் என்றும், அதற்கான வழிமுறைகள் மேலும் மேம்படுத்தப்படும் என்றும் அது கூறியது.

யாதவ் ஓய்வூதியம் மற்றும் பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (EDLI திட்டம்) கால்குலேட்டரை அறிமுகப்படுத்தினார். இது ஓய்வூதியம் பெறுபவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் இறப்பு இணைக்கப்பட்ட காப்பீட்டு பலன்களின் பல்வேறு நன்மைகளை கணக்கிட ஆன்லைன் வசதியை வழங்குகிறது.

14 ஆயிரம் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்

இபிஎஃப்ஓ-இன் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை திறமையான, பொறுப்பான மற்றும் எதிர்கால ஆயத்த பணியாளராக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இபிஎஃப்ஓ-​​இன் பயிற்சிக் கொள்கையையும் அவர் வெளியிட்டார். பயிற்சிக் கொள்கையின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 14,000 ஊழியர்களுக்கு எட்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக சம்பள பட்ஜெட்டில் 3 சதவீதம் சேமிக்கப்படும்.

மேலும் படிக்க | EPS அப்டேட்: இரட்டிப்பாகும் ஓய்வூதியம், ரூ. 15,000 வரம்பு அகற்றப்படும், விவரம் இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News