EPFO விதிகள்: PF கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த தப்ப மட்டும் செஞ்சிடாதீங்க!

வேலையிலிருந்து மாற்றம் அடைந்தாலோ அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டாலோ உடனேயே உங்கள் பிஎஃப் கணக்கிலுள்ள பணத்தை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Written by - RK Spark | Last Updated : Jul 25, 2022, 06:55 AM IST
  • வேலையை விட்டு வெளியேறும் உழியர்கள்
  • பிஎஃப் கணக்கை முடித்துக்கொள்வது சரியா?
  • நிபுணர்கள் கூறும் சில சிறந்த அறிவுறுத்தல்கள்
EPFO விதிகள்: PF கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த தப்ப மட்டும் செஞ்சிடாதீங்க! title=

ஒரு பணியாளர் வேலையை விட்டு வெளியேறிய பிறகு அவரது பிஎஃப் கணக்கின் முழுத் தொகையையும் திரும்பப் பெற்றுக்கொள்வது அவருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.  அப்படி நீங்கள் உடனேயே பிஎஃப் கணக்கிலுள்ள பணத்தை எடுத்துக்கொள்ளும்போது குறைந்த அளவே நிதியே கிடைக்கிறது, அதனால் உங்களால் மிகப்பெரிய தொகையை பெறமுடியாமல் போகும் நிலை ஏற்பட்டு விடுகிறது.  புதிய நிறுவனத்தில் நீங்கள் வேலைக்கு சேர்ந்த பின் பழைய பிஎஃப் கணக்கை அந்நிறுவனத்துடன் இணைத்துக்கொண்டு அதே கணக்கில் தொடர்வது நல்லதாகும்.  அதேசமயம் நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்களுக்கு பணம் தேவையில்லை எனும் பட்சத்தில் சில வருடங்களுக்கு நீங்கள் பிஎஃப்-ஐ விட்டுவிடலாம்.

பிஎஃப் கணக்கை முடிப்பது குறித்து சில நிபுணர்கள் கூறுகையில், ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறினாலும் அல்லது சில காரணங்களால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டாலும், நீங்கள் இன்னும் சில ஆண்டுகளுக்கு உங்கள் பி.எஃப் கணக்கை வைத்திருக்கலாம்.  அந்த பிஎஃப் கணக்கில் இருக்கும் உங்களுக்கு உடனடியாக பணம் தேவையில்லை என்றால் அந்த பணத்தை எடுக்க வேண்டாம். 

மேலும் படிக்க | TNPSC Group4Exam:டிஎன்பிஎஸ்சி தேர்வு எப்படி இருந்தது? தேர்வர்கள் கருத்து

வேலையை விட்டு வெளியேறிய பிறகும் உங்கள் பிஎஃப் கணக்கில் வட்டி தொடர்ந்து வந்துகொண்டே தான் இருக்கும், அதனால் நீங்கள் வேறொரு புதிய இடத்தில வேலைக்கு சேர்ந்தவுடன் அந்த கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றலாம்.  இதனால் உங்களுக்கு அதிகமான அளவில் பிஎஃப் தொகை கிடைக்கும்.

பிஎஃப் கணக்கு வட்டி 36 மாதங்களுக்கு, அதாவது வேலையை விட்டு வெளியேறிய 3 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும்.  முதல் 36 மாதங்களுக்கு பங்களிப்பு இல்லை என்றால், பணியாளரின் பிஎஃப் கணக்கு செயல்படாத கணக்கு என்ற பிரிவில் சேர்க்கப்படும்.  எனவே உங்கள் கணக்கை செயலில் வைத்திருக்க மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் கணக்கிலிருந்து சிறிது தொகையை எடுக்க வேண்டும். 

அதேசமயம் விதிகளின்படி, பங்களிப்பைச் செய்யாவிட்டால் பிஎஃப் கணக்கு செயலிழக்காது.  ஆனால் அந்த நேரத்தில் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும்.  பிஎஃப் கணக்கு செயலிழந்த பிறகும் அந்த தொகையை நீங்கள் க்ளைம் செய்யாதபட்சத்தில், அந்தத் தொகை மூத்த குடிமக்கள் நல நிதிக்கு சென்றுவிடும்.

மேலும் படிக்க | மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா எஸ்யூவி ஜூலை 20ம் தேதி அறிமுகம்: விலை ரூ 15 லட்சம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News