EPFO Pension: ஓய்வூதிய கொள்கையில் மாற்றம்! புதிய விதிகளை தெரிந்துகொள்ளுங்கள்!

EPFO Pension: 138 பிராந்திய அலுவலகங்களின் தரவுத்தளத்தின் அடிப்படையில் ஓய்வூதிய விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 31, 2022, 08:22 AM IST
  • ஓய்வூதியதாரர்கள் பெறக்கூடிய ஓய்வூதிய தொகையில் பெரிய மாற்றம் செய்யப்பட இருக்கிறது.
  • ஜூலை 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் இது தொடர்பாக கூட்டம் நடைபெற உள்ளது.
  • நாடு முழுவதும் உள்ள 73 லட்சம் ஓய்வூதியர்களின் கணக்குகளுக்கு ஒரே நேரத்தில் ஓய்வூதியம் கிடைக்கபெறும்.
EPFO Pension: ஓய்வூதிய கொள்கையில் மாற்றம்! புதிய விதிகளை தெரிந்துகொள்ளுங்கள்! title=

ஒவ்வொரு மாதமும் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎஃப்ஓ) ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கான முக்கியமான செய்தி தான் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.  இபிஎஃப்ஓ-ல் இருந்து ஓய்வூதியதாரர்கள் பெறக்கூடிய ஓய்வூதிய தொகையில் பெரிய மாற்றம் செய்யப்பட இருக்கிறது, இந்த மாற்றத்தின் மூலமாக அனைத்து ஓய்வூதியர்களும் மிகப்பெரிய பலனை அடையப்போகிறார்கள்.  ஜூலை 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய ஓய்வூதிய விநியோக முறையை அமைப்பதற்கான முன்மொழிவை பரிசீலித்த பிறகு, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அதற்கு ஒப்புதல் அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.  இந்த முறை செயல்படுத்தப்பட்ட பின்னர் , நாடு முழுவதும் உள்ள 73 லட்சம் ஓய்வூதியர்களின் கணக்குகளுக்கு ஒரே நேரத்தில் ஓய்வூதியம் கிடைக்கபெறும்.

மேலும் படிக்க | EPFO New Update: EPFO வெளியிட்டுள்ள முக்கியமான 5 புதிய விதிகள்! 

இபிஎஃப்ஓ ​-ன் 138 பிராந்திய அலுவலகங்கள் தற்போது, தங்கள் பகுதியின் பயனாளிகளின் கணக்கிற்கு ஓய்வூதியத்தை மாற்றுகின்றன.  அதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் ஒரே நேரத்தில் ஓய்வூதியத்தை பெறமுடியாமல் வெவ்வேறு நாட்கள் மற்றும் வெவ்வேறு நேரங்களில் அவர்களின் ஓய்வூதியத்தை பெறவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.  ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் இபிஎஃப்ஓ​​-ன் கூட்டத்தில் மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) கூட்டத்தில், மத்திய ஓய்வூதிய விநியோக முறையை உருவாக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று சில தகவல்கள் தெரிவித்தன.  இந்த முறை அமல்படுத்தப்பட்ட பிறகு, 73 லட்சம் ஓய்வூதியதாரர்கள் ஒன்றாக ஓய்வூதியம் பெறுவார்கள், 138 பிராந்திய அலுவலகங்களின் தரவுத்தளத்தின் அடிப்படையில் ஓய்வூதிய விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 20, 2021 அன்று நடைபெற்ற சிபிடியின் 229வது கூட்டத்தில், சி-டிஏசி மூலம் மையப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான அமைப்பை உருவாக்குவதற்கான முன்மொழிவுக்கு அறங்காவலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.  இதன் பின்னர் பிராந்திய அலுவலகங்களின் விவரங்கள் படிப்படியாக மத்திய தரவுத்தளத்திற்கு மாற்றப்படும் என்று கூட்டத்திற்குப் பிறகு தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.  இதன் மூலம் சேவைகளின் செயல்பாடு மற்றும் விநியோகத்தை எளிமையானதாக மாறும் என்று நம்பப்படுகின்றது.

மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியீடு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News