Free LPG Cylinder: ரேஷன் கார்டு இருக்கா? அப்போ இலவச எல்பிஜி சிலிண்டர் பெறலாம்

Free LPG Cylinder: ரேஷன் கார்டுதாரருக்கு ஆண்டுக்கு மூன்று எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என இந்த மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 12, 2022, 12:31 PM IST
  • பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
  • இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்
  • இந்த திட்டத்தின் பலன் யாருக்கு கிடைக்கும்
Free LPG Cylinder: ரேஷன் கார்டு இருக்கா? அப்போ இலவச எல்பிஜி சிலிண்டர் பெறலாம் title=

பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. அதன்படி இனி ஒரு வருடத்தில் 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உண்மையில், அரசாங்கம் ஏழைகளுக்கு எல்லா வழிகளிலும் உதவ முயற்சிக்கிறது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு முதலில் இலவச ரேஷன், இப்போது இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளன. அரசின் இந்த முடிவால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். எனவே இந்த இலவச சிலிண்டரை எவ்வாறு பருவது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்
இந்த நிலையில் நீங்களும் அந்தியோதயா அட்டை பயனாளியாக இருந்தால் இந்த செய்தி உங்களை உற்சாக படுத்தும். அந்த வகையில் இப்போது உங்களுக்கு அரசால் இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். புஷ்கர் சிங் தாமி அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, ரேஷன் கார்டுதாரருக்கு ஆண்டுதோறும் மூன்று எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். இதனால் அரசுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும் என்றாலும், சாமானியர்களுக்குத்தான் பலன் கிடைக்கும் என்றார். இந்த அறிவிப்புடன், அதில் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் உள்ளன, அவை பின்பற்றப்பட வேண்டும். அதன் பிறகுதான் இலவச சிலிண்டர்களைப் பெற முடியும். அவை என்னவென்று பார்ப்போம்.

மேலும் படிக்க | மலிவு விலை பெட்ரோல் விரைவில் சாத்தியம்; வெளியான முக்கிய தகவல்

இந்த திட்டத்தின் பலன் யாருக்கு கிடைக்கும்
அரசின் இலவச மூன்று கேஸ் சிலிண்டர்களின் நலனுக்காக, சில நிபந்தனைகளை நிறைவேற்றுவது கட்டாயம். அதன்படி பயனாளி உத்தரகண்ட் மாநிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும், மேலும் அந்த்யோதயா ரேஷன் கார்டுதாரர்கள் கேஸ் இணைப்பு அட்டையுடன் இணைப்பது கட்டாயமாகும்.

அதேபோல் நீங்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், உங்கள் அந்த்யோதயா அட்டையை இந்த மாதத்தில் அதாவது ஜூலையில் இணைக்கவும். இரண்டையும் இணைக்கவில்லை என்றால், அரசின் இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்தில் இருந்து நீங்கள் பறிக்கப்படுவீர்கள். இதன் கீழ், மாவட்ட வாரியாக அந்த்யோதயா நுகர்வோர் பட்டியல் உள்ளூர் கேஸ் ஏஜென்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, அந்தியோதயா கார்டுதாரர்களின் ரேஷன் கார்டுதாரர்கள் கேஸ் இணைப்பை இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் அரசின் இந்த முடிவிற்குப் பிறகு, அந்த மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் அந்த்யோதயா அட்டைதாரர்கள் பெரிய பலனைப் பெறுவார்கள், அதே நேரத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் மொத்தமாக 55 கோடி ரூபாய் சுமையைச் சுமக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | IOCL M15 Petrol: இந்தியன் ஆயிலின் மெத்தனால் கலந்த மலிவு விலை பெட்ரோல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News