மலிவு விலை பெட்ரோல் விரைவில் சாத்தியம்; வெளியான முக்கிய தகவல்

பெட்ரோல் டீசல் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து அரசு விரைவில் அறிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 18, 2022, 06:10 PM IST
மலிவு விலை பெட்ரோல் விரைவில் சாத்தியம்; வெளியான முக்கிய தகவல் title=

அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலைக்கு மத்தியில், பொதுமக்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் செய்தி வெளிவந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து அரசு விரைவில் அறிவிக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. ஏப்ரல் 1, 2023 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் பம்புகளில் 20% எத்தனால் கலவையுடன் பெட்ரோல்-டீசல் கிடைக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த கடந்த பல ஆண்டுகளாக எத்தனாலைக் கலக்க அரசு வலியுறுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

அரசின் திட்டம் 

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை மக்களை பாதித்துள்ள நிலையில், இப்போது அதன் விலையைக் குறைக்க எத்தனால் கலப்பது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்துகிறது. 2025ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை கலக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. முன்னதாக இந்த இலக்கை 2030 க்குள் அடைய திட்டமிடப்பட்டிருந்தாலும், அது பின்னர் இலக்கு ஐந்து ஆண்டுகள் முன்னதாகவே அடைய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | IOCL M15 Petrol: இந்தியன் ஆயிலின் மெத்தனால் கலந்த மலிவு விலை பெட்ரோல்

எத்தனால் லிட்டருக்கு ரூ.62 மட்டுமே விலையில் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பெட்ரோலியத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பாக சிறப்பான திட்டமிடலை மேற்கொண்டு வருகிறார். சர்க்கரையைத் தவிர, தானியங்கள் மற்றும் பிற கழிவுகளில் இருந்தும் எத்தனால் தயாரிக்க அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டில் வண்டல் படுகையில் இருந்து எத்தனால் உற்பத்தியை அரசாங்கம் அதிகரிக்கும். இது தவிர, பசுமை ஹைட்ரஜனில் அரசு கவனம் செலுத்தும்.

VAT வரியை குறைக்க மாநிலங்களிடம் கோரிக்கை

நாட்டில் ஒவ்வொரு நாளும் 6 கோடி மக்கள் பெட்ரோல் வாங்குகிறார்கள்.  5 மில்லியன் பீப்பாய்கள் தினசரி விற்பனை செய்யப்படுகிறது.  கச்சா எண்ணெய் விலை குறையும் போது தான் பெட்ரோல், டீசல் விலை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனால் பெட்ரோல் என்னும் மலிவு விலை பெட்ரோல் விற்பனை என்பது, எரிபொருள் விஷயத்தில் தன்னிறைவு பெறுவதற்கான ஒரு முக்கியமான முயற்சியாகும். இது இறக்குமதி சுமையையும் குறைக்கும். இதற்கிடையில் மாநிலங்கள் விதிக்கும் வாட் வரியை குறைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கோரியுள்ளது. 

மேலும் படிக்க | பெட்ரோல் டீசல் விலை குறையுமா; நிதி அமைச்சர் கூறுவது என்ன..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News