Benefits of Ragi: பாலை விட 3 மடங்கு கால்சியம் எதில் இருக்கிறது தெரியுமா?

ஆண்மைக்குறைவை நீக்கும், வயோதிகத்தை ஒத்திப்போடும் தானியம் எது தெரியுமா? பாலை விட 3 மடங்கு கால்சியம் எந்த உணவுப்பொருளில் இருக்கிறது? இதோ மலிவு விலையில் எல்லா இடத்திலும் கிடைக்கும் கேப்பை என்னும் ராகி தான் அந்த மாமருந்தாகும் தானியம்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 19, 2021, 03:48 PM IST
  • ஆண்மைக்குறைவை நீக்கும், வயோதிகத்தை ஒத்திப்போடும்
  • பாலை விட 3 மடங்கு கால்சியம் கொண்டது
  • சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்
Benefits of Ragi: பாலை விட 3 மடங்கு கால்சியம் எதில் இருக்கிறது தெரியுமா? title=

பாலை விட மூன்று மடங்கு கால்சியம் உள்ள உணவுப் பொருள் எது தெரியுமா? அரிசியை விட 10 மடங்கு கால்சியமும் இருக்கிறது அதே உணவு தானியத்தில்.

அது தான் ராகி, கேழ்வரகு, கேப்பை என்று பல பெயர்களில் அழைக்கப்படும் ராகி உடல் பருமன் குறைய உதவும். ஆனால், பாலும் அரிசியும் உடல் பருமன் அதிகரிக்கவே பயன்படும்.

ராகியில் உள்ள சத்துக்களைக் கேட்டால், இனிமேல் ராகி உங்கள் தினசரி உணவில் இடம் பிடித்துவிடும்.

Also Read | உடலை பொன்னிறமாக்கும் பொன்னாங்கண்ணி கண்களுக்கு ஒளியூட்டும்

ராகியில் இருக்கும் ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்குக்ம். இது, சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், உடலின் நைட்ரஜன் அளவை சமன்படுத்தவும் உதவுகிறது.

ராகியில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும். ராகியில் இருக்கும் தாவர வகை ரசாயன கலவைகள் (Phytochemical Compounds) சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

அதேபோல், ராகியில் போதுமான அளவு பொதிந்திருக்கும் லெசித்தின் (Lecithin) மற்றும் மெத்தியோனைன் (Methionine) போன்ற அமினோ அமிலங்கள் (Amino acids), கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Also Read | வெள்ளிப் பாத்திரங்களில் வைத்த உணவை கொடுப்பது குழந்தைக்கு நல்லதா? அறிவியல் சொல்வது என்ன?

ராகியில் இருக்கும் இரும்புச்சத்து ரத்தசோகையை குணப்படுத்தும், குடலுக்கு வலிமை அளிக்கும்.

ராகியில் இருக்கும் அபரிதமான சத்தானது, உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா போன்றவற்றை அண்டவிடாமல் பாதுகாக்கும். 

பிரசவித்த பெண்களுக்கு பால் சுரக்காமல் இருந்தால், ராகியை உணவாக கொடுத்தால், பால் சுரப்பு அதிகமாகும்.  

Also Read | நுங்கு உண்பதால் ஏற்படும் ஏராளமான நன்மைகள் என்ன தெரியுமா?

கேழ்வரகில் இருக்கும் ‘மித்தியானைன்’ என்னும் சிறப்பான அமினோஅமிலம் உள்ளது. இது அத்தியாவசியமான புரதச்சத்து ஆகும். வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம் மற்றும் முடியைப் பராமரிக்க ‘மித்தியானைன்’ அவசியமானது. இது ஈரலில் படியும் கொழுப்பை அகற்றுகிறது. 

மித்தியானைன்’ புரதச்சத்து வயோதிகம், மூட்டுவலி, ஆண்மைக்குறைவு என பல நோய்களுக்கு நல்ல பலன் அளிக்கிறது.

இவ்வளவு நன்மைகளைக் கொண்ட ராகியைக் கொண்டு, இட்லி, தோசை, அடை, ரொட்டி, புட்டு, பக்கோடா, பிஸ்கட், ஊத்தப்பம், ராகிக்கூழ், ராகிக்களி என விதம்விதமாய் சமைத்து சாப்பிடலாம்.   

Also Read | ஒரே நாளில் இந்தியாவில் 2,67,334 பேருக்கு கொரோனா பாதிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News