ஆண்மையை பெருக்கும் பிரண்டையில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் லிஸ்ட் இதோ..!

பிரண்டையை பொறுத்தவரை நரம்புத் தளர்ச்சியைப் போக்குகிறது. ஆண்மையைப்பெருக்குகிறது. பசியைத் தூண்டும்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 16, 2023, 09:12 PM IST
  • பிரண்டையில் மறைந்திருக்கும் சக்திகள்
  • துவையல் செய்து சாப்பிடலாம்
  • ஆண்மை பெருகும், பசி அதிகமாக எடுக்கும்
ஆண்மையை பெருக்கும் பிரண்டையில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் லிஸ்ட் இதோ..! title=

எலும்பு குணமாகும்

இளம் பிரண்டையை நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, காலை மாலைஇருவேளையும் நெல்லிக்காய் அளவிற்கு உண்டு வர வேண்டும். இப்படி ஒருமண்டலம் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில்இணைந்து எலும்புகள் பலம்பெறும்.

ஆஸ்துமாவுக்கு நிவாரணம்

பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல்பலம் பெறுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை தரும் . நெய்விட்டு பிரண்டைத் தண்டை வறுத்து துவையலாக அரைத்து உண்டு வரவயிற்றுப் பொருமல் சிறு குடல் பெருகுடல் புண் நீக்கி நல்ல பசி உண்டாகும். பிரண்டையுடன் சிறிது மிளகைக் கூட்டி அரைத்துச் சுண்டைக்காய் அளவு, தினந்தோறும் இரண்டு வேளை சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.

மேலும் படிக்க | மின்னல் வேகத்தில் எடை குறைக்கும் பச்சை மிளகாய்..எப்படி சாப்பிட வேண்டும்?

ஆண்மையை பெருக்கும்

பிரண்டை, நரம்புத் தளர்ச்சியைப் போக்குகிறது. ஆண்மையைப்பெருக்குகிறது. பசியைத் தூண்டும். பிரண்டைத் துவையல் மிகுந்த ருசியுள்ளது. இதைச் சாப்பிட்டால் பசி உண்டாகும். செரிமானக் கோளாறைப் போக்கும். மலச்சிக்கலை நீக்கும். குடலில்புழு இருந்தால் அவற்றைக் கொல்லும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். பிரண்டை உப்பை 2 - 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல்பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.

இதயம் பலப்படும்

பிரண்டைத் தண்டுகளைச் சிறிய அளவில் நறுக்கி ரசத்தில் சேர்த்துக் கொதிக்கவைத்து ஒரு டம்ளர் குடித்தால் எலும்புகள் பலம் பெறும். முறிந்த எலும்பு விரைவில்கூடும். ஒரு மாதம் பிரண்டை ரசம் குடிக்கவேண்டும். உடலில்கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில்கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால்இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதயவால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடிசாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.

மாதவிடாய் வலிக்கு நிவாரணம்

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலிபோன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ளதேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.

மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான கிரீன் டீ கல்லீரலை பாதிக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News