அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை! கிராஜூட்டி, ஓய்வூதியம் பறிக்கப்படலாம்!

தீபாவளியன்று மத்திய ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் அகவிலைப்படி உயர்வை பரிசாக வழங்கிய நிலையில்,  அரசு கடுமையான உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 20, 2022, 04:30 PM IST
  • கிராஜுட்டி மற்றும் ஓய்வூதியம் புதிய விதி.
  • மாற்றப்பட்ட விதிகள் குறித்த தகவல்கள்.
  • ஊழியர்களின் வேலை திறன் தொடர்பாக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை! கிராஜூட்டி, ஓய்வூதியம் பறிக்கப்படலாம்! title=

கிராஜுட்டி மற்றும் ஓய்வூதியம் புதிய விதி: மத்திய ஊழியர்களுக்கு டிஏ மற்றும் போனஸ் வழங்கிய நிலையில், தற்போது அரசு முக்கிய விதியை மாற்றியுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளது. ஊழியர்கள் இதைப் புறக்கணித்தால், அவர்கள் ஓய்வுக்குப் பிறகு  கிடைக்கும் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை எனப்படும் கிராஜுட்டியை இழக்க நேரிடும்.

ஊழியர்களின் வேலை திறன் தொடர்பாக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பணியாளர்கள் பணியில் அலட்சியமாக செயல்பட்டால், அரசின் புதிய விதிகளின்படி, ஓய்வு பெற்ற பின், ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மத்திய ஊழியர்களுக்கு பொருந்தும். என்றாலும், மாநிலங்களும் இதை செயல்படுத்தலாம்.

அறிவிப்பு வெளியிட்ட அரசு 

மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதி 2021-ன் கீழ் மத்திய அரசு சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் CCS (ஓய்வூதியம்) விதிகள் 2021 இன் விதி 8 ஐ மாற்றியுள்ளது. அதில் புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓய்வுக்குப் பிறகு அவர்களின் பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்றப்பட்ட விதிகள் குறித்த தகவல்கள் 

சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மத்திய அரசு இந்த அறிவிப்பை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி, குற்றவாளிகள் குறித்த தகவல் கிடைத்தால், அவர்களின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது, இந்த முறை அரசு இந்த விதியில் கடுமையாக உள்ளது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி பரிசு, அரசு வெளியிட்டுள்ள பெரிய அறிவிப்பு 

புதிய விதிகள்

ஓய்வுபெற்ற ஊழியர்களின் நியமன அதிகாரத்தில் சேர்க்கப்பட்டுள்ள தலைமை அதிகாரிகளுக்கு பணிக்கொடை அல்லது ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெறும் ஊழியர் நியமிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது துறையுடன் தொடர்புடைய செயலர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்தி வைக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு ஊழியர் தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால், குற்றமிழைத்த ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்தி வைக்க சிஏஜிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை மேற்கொள்ளப்படும் விதம்

பணியின் போது ஊழியர்கள் மீது ஏதேனும் துறை அல்லது நீதித்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம்.

ஒரு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டால், அவருக்கும் அதே விதிகள் பொருந்தும்.

ஒரு ஊழியர் ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை  பெற்றுக் கொண்ட பிறகு, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரிடமிருந்து முழு அல்லது பகுதியளவு ஓய்வூதியம் அல்லது பணிக்கொடை தொகையை திரும்பப் பெறலாம்.

துறைக்கு ஏற்பட்ட இழப்பின் அடிப்படையில் இது மதிப்பிடப்படும்.

அதிகாரம் பெற்றவர்கள் விரும்பினால், பணியாளரின் ஓய்வூதியம் அல்லது பணிக்கொடையை நிரந்தரமாக அல்லது சிறிது காலத்திற்கு நிறுத்தலாம்.

இறுதி உத்தரவுக்கு முன் பெற வேண்டிய பரிந்துரை

இந்த விதியின்படி, அத்தகைய சூழ்நிலையில் எந்தவொரு அதிகாரியும் இறுதி உத்தரவை வழங்குவதற்கு முன் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் பரிந்துரைகளைப் பெற வேண்டும். ஓய்வூதியம் நிறுத்தப்பட்டாலோ அல்லது திரும்பப் பெறப்பட்டாலோ, குறைந்தபட்சத் தொகை மாதம் 9000 ரூபாய்க்கு குறைவாக இருக்கக்கூடாது என ஏற்கனவே விதி 44ன் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தீபாவளி பரிசு, அரசு தொடங்கிய சிறப்பு திட்டம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News