ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தீபாவளி பரிசு, அரசு தொடங்கிய சிறப்பு திட்டம்

ரேஷன் பயனாளிகளுக்கு அரசு மீண்டும் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முறை தீபாவளியை மேலும் இனிமையாக்க சர்க்கரையின் விலையைக் குறைக்க அரசாங்கம் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 19, 2022, 08:26 AM IST
  • கோடிக்கணக்கான ரேஷன் கார்டுதாரர்களுக்கு லாட்டரி
  • இந்த சிறப்பு திட்டத்தை அரசு தொடங்கியது
  • இலவச ரேஷன் திட்டம்
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தீபாவளி பரிசு, அரசு தொடங்கிய சிறப்பு திட்டம் title=

ரேஷன் கார்டு அப்டேட்: நீங்களும் ரேஷன் கார்டு வைத்து, இதன் மூலம் அரசின் ரேஷன் திட்டத்தை பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கானது. ஆம், அரசு தொடங்கியுள்ள புதிய திட்டத்தைக் கேள்விப்பட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த முறை லாட்டரி அடித்துவிட்டது என்றே கூறுவீர்கள். இத்திட்டத்தின் கீழ், எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் இனி ரேஷன் விநியோகக் கடைகளில் மானிய விலையில் கிடைக்கும். மேலும் இந்த திட்டம் ஏழை மக்களை கருதில் கொண்டு அரசால் தொடங்கப்பட்டுள்ளது.

5 கிலோ கேஸ் சிலிண்டர்: இத்திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்களுக்கு 5 கிலோ கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் தீபாவளிக்கு முன் துவங்க உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களிடையே ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைக்காரர்கள் கமிஷன் தொகையை அதிகரிக்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இந்த முயற்ச்சி தற்போது எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பான் கார்டு வைத்திருப்போர் கவனதிற்கு! இதை உடனடியாக செய்யுங்கள்!

ஜன் சுவிதா கேந்திரா திறக்க ஒப்புதல்: இதனிடையே அரசு ரேஷன் கடை நடத்தும் மக்களின் வருமானத்தை அதிகரிக்க கமிஷன் தொகையை அதிகரிக்காமல் இந்த புதிய முறையை அரசு தொடங்கியுள்ளது. இதன் கீழ், ரேஷன் கடைகளில், பொது வசதி மையங்களை, கடைசி நாளில் திறக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த புதிய திட்டத்தின் கீழ் 5 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டர்கள் இனி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும்.

ரேஷன் கடைகளில் சிலிண்டர் விலை: சிலிண்டர் விற்பனையில் கடைக்காரர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் கமிஷன் கொடுக்கும். உஜ்வால் எரிவாயு இணைப்புதாரர்களுக்கு 5 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டர் சலுகை விலையில் வழங்கப்படும். இந்த விலைகள் பின்னர் அதிகரிக்கலாம் அல்லது குறைக்கப்படலாம். மேலும் மற்றவர்கள் இந்த சிலிண்டருக்கு ரூ.526 செலுத்த வேண்டும். இதன் மூலம் இனி சிலிண்டரை பெற இனி கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மற்றும் சிறு வணிகர்கள் ஏஜென்சிகள் அல்லது நகரங்களுக்கு செல்ல வேண்டியதில்லை.

இதற்கிடையில் ரேஷன் கடை உரிமையாளர்கள் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 20 நிரப்பப்பட்ட சிலிண்டர்களை வைத்திருக்கலாம். மேலும், கடைகளில் தீ தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | mAadhaar பயன்படுத்த பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News