இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு எவ்வளவு செலவாகும்? - இதோ பதில்..

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா இந்தியாவில் தடுப்பூசிக்கு எவ்வளவு செலவாகும் என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்...!

Last Updated : Jul 22, 2020, 02:18 PM IST
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு எவ்வளவு செலவாகும்? - இதோ பதில்..  title=

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா இந்தியாவில் தடுப்பூசிக்கு எவ்வளவு செலவாகும் என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்...!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்து வருகிறது. நோய் பாதிப்பில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி வருக்கின்றனர். இதை தொடர்ந்து, COVID-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பாடு வருகிறது. இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute of India) தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா இந்தியாவில் தடுப்பூசிக்கு எவ்வளவு செலவாகும் என்பது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் (Oxford University) உருவாக்கிய கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ₹.1000 என்று ஆதார் பூனவல்லா (Adar Poonawalla) தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்  மற்றும் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பயோஃபார்மா நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா கொரோனாவுக்கான தடுப்பு மருந்து  கண்டுபிடித்துள்ளது. தானாக  முன்வந்த 1077 தன்னாலர்வர்கள் மீது கொரோனா தொற்று செலுத்தப்பட்டது.  அதன்பின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை அவர்கள் மீது செலுத்தியது. இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட 1077 தன்னாலர்வர்கள் கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பதாக அவர்கள் நடத்திய சோதனை முடிவில் தெரியவந்ததாக கண்டறியப்பட்டது. 

READ ALSO | Corona Vaccine: மனித பரிசோதனையின் சில முக்கிய அம்சங்கள்!!

இந்நிலையில், இந்தியாவில் உள்ள புனேவை தலைமை இடமாக கொண்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து பரிசோதனைக்கான அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்து உள்ளது. இது குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக இயக்குனர் ஆதார் பூனவல்லா கூறுகையில்.... "ஆகஸ்ட் மாதம் 4,000 - 5,000 தன்னார்வலர்களுடன் இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளை இந்தியாவில் தொடங்கும் என அவர் கூறினார். 

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்தப்பட்ட பரிசோதனையில் வயதானவர்களை அவர்கள் தேர்வு செய்யவில்லை. எனவே, இந்தியாவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் வயதானவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மும்பை, புனே நகரில் இருந்து தங்கள் தேர்வுசெய்வர்கள் என கூறப்படுகிறது. இந்த தடுப்பூசியின் விலை ₹.1000 ஆக இருக்கும் என சீரம் இன்ஸ்டிடியூட்  நிறுவனம் அறிவித்துள்ளது.

Trending News