'தேர்தல் தேதி நாளை அறிவிப்பு?' அவசரமாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் - பின்னணி இதுதான்!

Election Commissioners Appointed: மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோரை புதிய தேர்தல் ஆணையர்களாக நியமித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 14, 2024, 09:35 PM IST
  • தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்றார்.
  • கடந்த மார்ச் 9இல் மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயல் பொறுப்பை ராஜினாமா செய்தார்.
  • 212 பேர் கொண்ட பட்டியலில் இருந்து 6 பேர் தேர்வாகி, அவர்களுள் இந்த இருவர் தேர்வாகி உள்ளனர்.
'தேர்தல் தேதி நாளை அறிவிப்பு?' அவசரமாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் - பின்னணி இதுதான்! title=

Lok Sabha Election Date Announcement: தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான குழுவிற்கு எதிராக நாளை உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது. அந்த வகையில், அதற்கு சில மணி நேரங்களுக்கு முன் இன்று அந்த இரண்டு காலியிடங்களுக்கும் நியமனம் நடைபெற்று உள்ளது. மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோரை புதிய தேர்தல் ஆணையர்களாக நியமித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டது.

200 மேற்பட்ட பெயர்கள்

முன்னதாக, தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் மூன்று பேர் கொண்ட குழுவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸின் அதிர் ரஞ்சன் சௌத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் அதிர் ரஞ்சன் சௌத்ரி கூறுகையில், இன்று (மார்ச் 14) பகல் 12 மணி கூட்டத்திற்கு, நேற்றிரவு 200க்கும் மேற்பட்ட பெயர்களை கொண்ட பட்டியலை கொடுத்தார்கள்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் கடைசியாக தேர்வு செய்யப்பட்ட 6 பேரில் இருந்தே ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க | மம்தா பானர்ஜிக்கு படுகாயம் - முகம் முழுவதும் ரத்தம்... அதிர்ச்சி!

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரியான ராஜிவ் குமார் உடன் இவ்விருவருக்கும் நாளை காலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், நாளை மதியம் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, அனுப் சந்திரா பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோருக்கு பதில் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோரை நியமித்துள்ளது. அனுப் சந்திரா பாண்டே கடந்த பிப். 14ஆம் தேதி 65 வயதை எட்டியதன் அடிப்படையில் அன்று ஓய்வு பெற்றார். அருண் கோயல் கடந்த மார்ச் 9ஆம் தேதி திடீரென ராஜினாமா செய்தது பலரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது. 

அருண் கோயலுக்கு 2027ஆம் ஆண்டு வரை தேர்தல் ஆணையத்தில் பதவிக்காலம் உள்ள நிலையில் அவரது மார்ச் 9ஆம் தேதி அன்று ராஜினாமா செய்தார். தற்போது தலைமை தேர்த்ல ஆணையராக உள்ள ராஜிவ் குமாருக்கு பின் அந்த பதவிக்கு அருண் கோயல் வருவதாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. மக்களவை தேர்தல் தேதி மார்ச் 15ஆம் தேதி அல்லது 16ஆம் தேதி வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் படிக்க | குடியுரிமை திருத்தம் சட்டம் தொடர்பாக மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் -ராஜ்நாத் சிங்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News