7th Pay Commission: டிஏ ஹைக் பற்றிய முக்கிய முடிவு..விரைவில் அறிவிப்பு, ஊழியர்கள் ஹேப்பி

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 18, 2023, 04:10 PM IST
  • இரண்டு முறை அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது.
  • அகவிலைப்படி ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
  • அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?
7th Pay Commission: டிஏ ஹைக் பற்றிய முக்கிய முடிவு..விரைவில் அறிவிப்பு, ஊழியர்கள் ஹேப்பி title=

7 ஆவது ஊதியக்கமிஷன், சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கியமான செய்தி உள்ளது. அவர்களுக்கு அடுத்தடுத்து சில நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. மத்தியில் உள்ள மோடி அரசாங்கம் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை விரைவில் அதிகரிக்கப் போகிறது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து அரசு முடிவெடுத்துள்ளதாகவும், விரைவில் அரசு சார்பில் இந்த மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. மத்திய அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தப் போவதாகவும், அதன் பிறகு அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதமாக உயரும் என்றும் கூறப்படுகிறது. 

எனினும், இது தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்த அறிவிப்பையும் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை. ஆனால், அரசாங்கம் விரைவில் ஊழியர்களுக்கு இந்த பரிசுகளை வழங்கக்கூடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

இரண்டு முறை அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது. கடைசியாக ஜனவரி 2023 -இல் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு மார்ச் 2023 இல் அறிவிக்கப்பட்டது. இது ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வந்தது. இதற்கு முன்னதாக 38 சதவீதமாக இருந்த டிஏ 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அறிவிப்பு ஜூலை 2023 முதல் பொருந்தும். இதற்கான அறிவிப்பு செப்டம்பர் அல்லது அக்டோபரில் அறிவிக்கப்படலாம்.

ஆண்டில் இரு முறை மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் அதிகரிக்கப்படுகின்றது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் வரவிருக்கும் அகவிலைபப்டி உயர்வுக்குப் பிறகு அதிகம் பயனடைவார்கள்.

இந்த மாநிலங்களில் அகவிலைப்படி அதிகரித்தது

சமீபத்தில் மத்திய பிரதேசம் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. முன்னதாக, ஒடிசா அரசும் தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்தி அறிவித்தது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி இந்த ஆண்டு ஜனவரி 23 முதல் அமலுக்கு வரும் மற்றும் ஊழியர்களுக்கு ஜூன் மாத சம்பளத்துடன் இந்தத் தொகையும் கிடைக்கும்.

மேலும், சமீபத்தில் சத்தீஸ்கர் அரசும் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளது. மாநில அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு தொடங்கும். அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு இங்குள்ள ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும்.

முன்னதாக, கர்நாடகா அரசும் ஜனவரி 1, 2023 முதல் 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தியது. கர்நாடகாவில் டிஏ 31 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்துள்ளன.

ஜூலை மாதத்திற்கான AICPI குறியீட்டின் எண்ணிக்கை, அகவிலைப்படியைக் கணக்கிடுவதற்கான கடைசித் தரவாக இருக்கும். இதன் அடிப்படையில் இம்முறை ஊழியர்களின் டிஏ 4 சதவீதம் உயரும் அல்லது இன்னும் அதிகரிக்கலாம். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி இந்த உயர்வு இருக்கும்.

மேலும் படிக்க | 8th Pay Commission 44.44% ஊதிய உயர்வு: விரைவில் 4 நல்ல செய்திகள்... ஊழியர்கள் ஹேப்பி!!

அகவிலைப்படி ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்

மார்ச் 2023 இல், அரசாங்கம் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தியது. அப்போது அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. இப்போது அடுத்த திருத்தம் ஜூலை 2023 முதல் செய்யப்பட உள்ளது. ஆனால், செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபரில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். அகவிலைப்படியின் திருத்தம் ஏஐசிபிஐ குறியீட்டைப் பொறுத்தது. இந்த குறியீடு எவ்வளவு வேகமாக அதிகரிக்கிறதோ, அதே அளவு வேகமாக அகவிலைப்படியும் அதிகரிக்கிறது. இதுவரை ஜனவரி 2023 முதல் மே 2023 வரையிலான புள்ளிவிவரங்கள் வந்துள்ளன.

அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?

மே 2023 இன் ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளின்படி, அகவிலைப்படி 45.58 சதவீதத்தை எட்டியுள்ளது. குறியீடு 134.7 புள்ளிகளில் உள்ளது. இதில் 0.50 புள்ளிகள் உயர்வு காணப்பட்டது. ஆனால், ஜூன் மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. ஜூன் மாதத்தில் குறியீட்டு எண் அதிகரிக்காவிட்டாலும் அல்லது குறியீட்டில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டாலும் கூட, ஜூலை 2023 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 46 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும். அகவிலைப்படியானது மொத்த எண்ணிக்கையில் (ரவுண்ட் ஃபிகர்) செலுத்தப்படுகிறது. குறியீட்டு எண் 45.50 ஆக இருந்திருந்தால், அகவிலைப்படி 45 சதவீதம் அதிகரித்திருக்கும். ஆனால், மே மாதத்திலேயே குறியீடு 45.58 சதவீதத்தை எட்டியுள்ளது. ஆகையால் அகவிலைப்படி குறைந்தது 4 சதவீதம் அதிகரிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 8th Pay Commission விரைவில்.... ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News