சூரியனின் சஞ்சாரம் இந்த ‘5’ ராசிகளுக்கு அளவிட முடியாத செல்வத்தைத் தரும்!

இந்த உலகிற்கே ஒளியினைத் தருபவர் சூரியன். அவரின்றி இங்கே ஒரு அணுவும் அசையாது. உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் வளமாக வாழ்வதற்கு முக்கிய காரணமாக விளங்குபவர் சூரியன். சூரிய ஒளி இல்லாவிட்டால், இவ்வுலகில் இருள் மட்டுமே நிறைந்திருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 4, 2022, 04:35 PM IST
சூரியனின் சஞ்சாரம் இந்த ‘5’ ராசிகளுக்கு அளவிட முடியாத செல்வத்தைத் தரும்! title=

இந்த உலகிற்கே ஒளியினைத் தருபவர் சூரியன். அவரின்றி இங்கே ஒரு அணுவும் அசையாது. உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் வளமாக வாழ்வதற்கு முக்கிய காரணமாக விளங்குபவர் சூரியன். சூரிய ஒளி இல்லாவிட்டால், இவ்வுலகில் இருள் மட்டுமே நிறைந்திருக்கும்.

அத்தகைய கிரகங்களின் அரசனான சூரியன் மாதந்தோறும் ராசியை மாற்றுவது மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மார்ச் 15ம் தேதி சூரியன் தனது ராசியை மாற்றி மீன ராசிக்கு பிரவேசிக்க உள்ளார். தற்போது சூரியன் கும்ப ராசியில் இருக்கிறார். ஜோதிட சாஸ்திரப்படி 2022 மார்ச் 15க்கு பிறகு சூரியன் உட்பட மற்ற கிரகங்களின் நிலை மாற்றம் 5 ராசிக்காரர்களுக்கு மிக நல்ல காலத்தை தரப்போகிறது. இதன் காரணமாக மார்ச் 15 முதல் ஏப்ரல் 14 வரையிலான ஒரு மாத காலம் இந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலனைத் தரும்.

மேலும் படிக்க | சுக்ரனின் அருளால் இம்மாதம் முழுவதும் 4 ராசிகள் காட்டில் பண மழை பெய்யும்!

மேஷம்

மீன ராசியில் சூரியனின் சஞ்சாரம் மேஷ ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கும். குறிப்பாக மாணவர்களுக்கு இந்த நேரம் மிகவும் நல்லது. வெளிநாடு செல்ல வேண்டும் அல்லது பெரிய கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறும். அதே சமயம் உழைக்கும் மக்களும் தங்கள் தொழிலில் பலன் அடைவார்கள்.

மேலும் படிக்க | காதல் உறவை ஒரு போதும் கைவிடாத ‘5’ ராசிக்காரர்கள்..!!

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் செல்வத்தைத் தரும். இது உங்கள் சேமிப்பை அதிகரித்து உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். முதலீடு மற்றும் பரிவர்த்தனைகளுக்கு இது ஒரு நல்ல நேரம். இந்த நேரம் பதவி உயர்வு- ஊதிய அதிகரிப்புக்கான சாத்தியம் அதிகம் உள்ளது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் தொழிலில் மிகவும் சாதகமாக இருக்கும். அவர்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்கும்.  இந்த ஆண்டு முழுவதும் தொழில் மற்றும் நிதி அடிப்படையில் அவருக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். குறிப்பாக அரசு வேலையில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் அதிகப் பணத்தைத் தரும். அதன் விளைவு அவர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் தெரியும். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் தொழில் ரீதியாக சிறப்பானதாக இருக்கும். முன்னேற்றம் அடைவீர்கள். பண வரவு சாதகமாக இருக்கும். பெரிய சாதனைகளை அடையலாம். உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR  

Trending News