Anna Serial: பாண்டியம்மா போடும் திட்டம் - அண்ணா சீரியல் அப்டேட்!

Anna TV Serial Online: நேற்றைய எபிசோடில் மணப்பெண் மண்டபத்திற்கு வரும்போது பேனர் கீழே சரிந்து விழுந்த நிலையில் அபச குணம் என்று தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

Written by - RK Spark | Last Updated : Jan 29, 2024, 12:27 PM IST
  • உண்மையை உளறிய தங்கைகள்.
  • பாண்டியம்மா போடும் திட்டம்.
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
Anna Serial: பாண்டியம்மா போடும் திட்டம் - அண்ணா சீரியல் அப்டேட்! title=

Anna TV Serial Online: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மணப்பெண் மண்டபத்திற்கு வரும்போது பேனர் கீழே சரிந்து விழுந்த நிலையில் அபச குணம் என்று தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  அதாவது என்ன இப்படி நடக்குது பொண்ணு ராசி இல்லாதவளோ என எல்லோரும் பேச தொடங்க உன்னோட தாய் மாமாவும் இந்த கல்யாணம் நடக்குமா நடக்காதா என்று தெரியலையே என்று சந்தேகத்துடன் பேச கவிதாவின் அக்கா என் மாமா கொஞ்ச நேரம் சும்மா இரு மாப்பிள்ளை வீட்டுக்காரர்களே எல்லாம் எடுத்து போட்டு செய்யறாங்க இந்த மாதிரி வாழ்க்கை யாருக்கு கிடைக்கும் என சொல்கிறாள். 

anna

மேலும் படிக்க | ரச்சிதாவிற்கு 2வது திருமணம்? மாப்பிள்ளை இவர்தானா? வைரலாகும் தகவல்…

அதன் பிறகு மாப்பிள்ளைக்கு பொண்ணு வீட்டுக்காரங்க தான் ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டும் என்று சொல்ல சண்முகம் குடும்பத்தினர் வந்து நிற்கின்றனர். முத்துப்பாண்டி எப்படியும் ரத்னாவ தான் கல்யாணம் பண்ணிக்க போறேன் எதுக்குப்பா இதெல்லாம் என்று கேட்க அடேட் முட்டாப் பயலே இதெல்லாம் வழக்கம், அதையெல்லாம் சரியாக செய்தால் தான் சந்தேகம் வராது என திட்டுகிறார். ஸ்கூலில் ரத்னா தூத்துக்குடி கிளம்ப தயாராக இருக்க அந்த வழியாக வரும் பாண்டியம்மா சண்முகத்தின் தங்கைகள் மூலமாக தூத்துக்குடி செல்லும் விஷயத்தை கேள்விப்படுகிறாள். இதனால் அதிர்ச்சியடையும் பாண்டியம்மா ரத்னா இல்லாமல் இந்த கல்யாணம் நடக்காதே என பதறி ஓடி வருகிறான். 

முத்துப்பாண்டி மற்றும் சுந்தரபாண்டியிடம் ரத்னா ஊருக்கு போகும் போது சொல்ல முத்துப்பாண்டி இதுக்கு தான் எனக்கு வந்து ஆல் த பெஸ்ட் சொன்னாளா என்று ஸ்கூலில் நடந்த விஷயத்தை சொல்கிறான். உடனே பாண்டியம்மா ரத்னாவை இங்கேயே தடுத்து நிறுத்த தன்னிடம் ஒரு ஐடியா இருப்பதாக சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? முத்துப்பாண்டி கல்யாணத்தில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சின்னத்திரை நடிகரை கரம் பிடித்த ‘சாட்டை’ பட நாயகி! ரசிகர்கள் வாழ்த்து..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News