மீண்டும் முருங்கைமரம் ஏறிய வேதாளம்-தீபாவுக்கு செம ஷாக்! கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam Serial Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

Written by - Yuvashree | Last Updated : Oct 12, 2023, 01:52 PM IST
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் கார்த்திகை தீபம்.
  • முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடக்கிறது.
  • தீபாவிற்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது.
மீண்டும் முருங்கைமரம் ஏறிய வேதாளம்-தீபாவுக்கு செம ஷாக்! கார்த்திகை தீபம் அப்டேட் title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான தொடர்களுள் ஒன்றாக விளங்குவது, கார்த்திகை தீபம். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. குடும்ப கதையை பிண்ணனியாக கொண்ட இந்த தொடருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் மட்டுமன்றி, பல இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ள கார்த்திகை தீபம் சீரியல் பல எதிர்பாராத விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 

நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன?

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் தீபாவுக்கு முதலிரவுக்கு நேரம் குறித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

இன்றைய எபிசோடில் நடக்க இருப்பது என்ன? 

முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடக்க ஐஸ்வர்யா வழக்கம் போல சதி திட்டம் தீட்டி தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறாள், ஆனால் மீனாட்சியும் மைதிலியும் சேர்ந்து ஐஸ்வர்யாவை கலாய்த்து வெறுப்பேற்றுகின்றனர். 

மறுபக்கம் அலங்காரம் செய்து கொண்ட தீபா அப்பா அம்மா ஜானகி மற்றும் தர்மலிங்கம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள், தர்மலிங்கம் அபிராமி கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிக்கமா, அவங்க ஆசிர்வாதமும் உனக்கு ரொம்ப முக்கியம் என்று சொல்ல தீபாவும் அபிராமிடம் ஆசிர்வாதம் வாங்க வருகிறாள். 

Karthikai Deepam

மேலும் படிக்க | கண்ணீருடன் நிற்கும் ஜானகி - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்!

அபிராமி ரூமுக்குள் நுழைந்த தீபா தன்னை மருமகளாக ஏற்று கொண்டதற்கு நன்றி சொல்ல அபிராமி இங்க பாரு உனக்கு இந்த வீட்டில எந்த தடையும் கிடையாது, நீ பூஜா ரூம், கிட்சன் என எல்லா இடத்துக்கும் போகலாம், மற்ற மருமகள்களுக்கு இருக்க எல்லா உரிமையும் உனக்கு இருக்கு, ஆனால் நான் உன்னை மருமகளாக ஏற்று கொள்ள மாட்டேன் என்று ஷாக் கொடுக்கிறாள். 

இதையெல்லாம் கார்த்திக் ரூமுக்கு வெளியே இருந்து கேட்டு விடுகிறான், இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: மகா செய்த சூழ்ச்சி.. ராம், சீதா எடுத்த முடிவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News