கார்த்திகை தீபம் அப்டேட்: ஏற்றி விட்ட ஐஸ்வர்யா, அபிராமிக்கு ஷாக் கொடுத்த கார்த்திக்

Karthigai Deepam September 4, 2023 Serial Update:  பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்று ‘கார்த்திகை தீபம்’ சீரியல். கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 4, 2023, 11:51 AM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
  • உண்மையை சொன்னேன் என்று கார்த்திக் சொல்கிறார்.
கார்த்திகை தீபம் அப்டேட்: ஏற்றி விட்ட ஐஸ்வர்யா, அபிராமிக்கு ஷாக் கொடுத்த கார்த்திக் title=

கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் தர்மலிங்கம் தீபாவை வீட்டிற்குள் அழைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | குஷி படத்தில் அதிக சம்பளம் வாங்கியது யார்? விஜய் தேவரகொண்டாவா? சமந்தாவா?

அதாவது, தீபா கார்த்திக்கிடம் அப்பாவிடம் என்ன சொன்னீங்க என்று கேட்க உண்மையை சொன்னேன் என்று கார்த்திக் சொல்கிறார். அதனை தொடர்ந்து கார்த்திக் தீபாவை விட தான் வந்தேன் நான் கிளம்பறேன் என்று சொல்லி கிளம்புகிறான். 

மறுபக்கம் ஐஸ்வர்யா தீபாவை விட போன கார்த்திக்கை இன்னமும் காணோம்? தர்மலிங்கம் குடும்பம் அவ்வளவு பேசிட்டு ஏதோ பிளான் போட்டு இருக்காங்க என்று சொல்லி ஏற்றி விட அபிராமி கார்த்திக் போன் செய்ய அவன் தீபாவை விட்டுட்டு கிளம்ப போறேன், இன்னும் 2 மணி நேரத்தில் வீட்டில் இருப்பேன் என்று சொல்கிறான். 

அடுத்து கார்த்திக் காரில் ஏறி உட்கார்ந்து காரை ஸ்டார்ட் செய்ய ஸ்டார்ட் ஆகவில்லை, என்ன செய்வது என்று யோசிக்கும் கார்த்திக் பக்கத்தில் இருந்த ஜூஸை எடுத்து குடிக்க கையெல்லாம் கரையாகி விட தீபா தண்ணீர், சோப்பு மட்டும் டவலை கொண்டு வந்து கொடுக்கிறாள். பிறகு கார்த்திக் திரும்பவும் கிளம்ப தயாராக அந்த நேரம் பார்த்து அங்கு வரும் ஊர்க்கார்கள் காப்பு கட்டி இருக்கு, ஊரை விட்டு யாரும் வெளியே போக கூடாது என்று சொல்கின்றனர். 

மேலும் தர்மலிங்கத்திடம் நம்ம ரூபஸ்ரீ கச்சேரியை தான் வச்சிருக்கோம், நீங்க மாப்பிளையை உள்ள கூட்டிட்டு போங்க என்று சொல்லி கிளம்ப கார்த்திக் அபிராமிக்கு போன் செய்து ஊரை விட்டு வர முடியாத சூழல் உருவானதை பற்றி சொல்ல ஷாக்காகும் அபிராமி சரி நீ இருந்துட்டு வா என்று சொல்லி போனை வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | 7ஜி ரெயின்போ காலனி பார்ட் 2வா? வாவ்.. செம அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News