கார்த்திகை தீபம்: அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போட்ட ரூபஸ்ரீ.. தீபாவுக்கு ஷாக் கொடுத்த கோகிலா

Karthigai Deepam TV Serial Online: அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போட்ட ரூபஸ்ரீ.. தீபாவுக்கு ஷாக் கொடுத்த கோகிலா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 21, 2023, 12:33 PM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
  • இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கார்த்திகை தீபம்: அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போட்ட ரூபஸ்ரீ.. தீபாவுக்கு ஷாக் கொடுத்த கோகிலா title=

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்று தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தின்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போட்ட ரூபஸ்ரீ.. தீபாவுக்கு ஷாக் கொடுத்த கோகிலா கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் அப்டேட்:

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரூபஸ்ரீயை சிக்க வைத்து பல்லவியை கண்டுபிடிக்க பிளான் போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: சீதாவால் சிக்க இருந்த குற்றவாளி.. கடைசியில் ட்விஸ்ட் வைத்த மகாலட்சுமி

அதாவது, கார்த்திக் இளையராஜாவிடம் எப்படியாவது ரூபாஸ்ரீயை பாட்டு பாட ஒப்பு கொள்ள வைக்க வேண்டும் என்று சொல்லி அவளை சந்திக்க முகவரி கொடுத்து அனுப்புகிறான், அடுத்து ரூபாஸ்ரீ வீட்டிற்கு வரும் இளையராஜா இந்த நிகழ்ச்சி குறித்து சொல்ல கோகிலா அவங்க அம்மா ராஜஸ்ரீ கிட்ட கேட்டு தான் முடிவை சொல்ல முடியும் என தனியாக சென்று தீபாவுக்கு போன் போடுகிறாள். 

இங்கே இளையராஜா கார்த்திக்கு போன் செய்து அவங்க யார்கிட்டயோ கேட்டு தான் சொல்ல முடியும்னு சொல்றாங்க என்று நடந்தவற்றை சொல்கிறான். தீபா கார்த்தி பக்கத்தில் இருந்ததால் கோகிலாவின் போனை எடுக்க முடியாமல் போகிறது, இந்த சமயத்தில் இந்த கச்சேரியில் பாடினால் சம்பளம் 10 லட்சம் ருபாய் என்று கேட்க கோகிலா பண ஆசையில் இதுக்கு ஓகே சொல்லி ரூபாஸ்ரீயை அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போட வைத்து விடுகிறாள். 

பணமும் வாங்கிட்டு அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போட்டுட்டு பாட வரலைனா பெரிய பிரச்னையாகிடும் என வார்னிங் கொடுத்து விட்டு இளையாராஜா கிளம்பியதும் தீபா கோகிலாவுக்கு போன் செய்து இதெல்லாம் கார்த்தியின் பிளான் என்று சொல்கிறாள். ஆனால் கோகிலா அதை நம்ப மறுக்கிறாள். அதே சமயம் நீ இந்த கச்சேரியில் பாடியே ஆக வேண்டும் எனவும் ஷாக் கொடுக்கிறாள். 

இதனால் தீபா கார்த்தியிடம் தம்பியை பார்க்க ஊருக்கு போயிட்டு வருவதாக சொல்ல அவன் நானும் வரேன் என்று சொல்லி ஷாக் கொடுக்கிறான், இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | மாரியை எப்படி கொல்வது? யோசிக்கும் மோஹினி... டிவிஸ்ட் கொடுத்த சூர்யா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News