மாரியை எப்படி கொல்வது? யோசிக்கும் மோஹினி... டிவிஸ்ட் கொடுத்த சூர்யா

Maari TV Serial Online: மாரியின் கழுத்தை நெரித்து கொல்ல பிளான் போடும் மோஹினி.. ட்விஸ்ட் கொடுத்த சூர்யா -  மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 21, 2023, 12:21 PM IST
  • மாரியின் கழுத்தை நெரித்து கொல்ல பிளான் போடும் மோஹினி
  • ட்விஸ்ட் கொடுத்த சூர்யா
  • மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
மாரியை எப்படி கொல்வது? யோசிக்கும் மோஹினி... டிவிஸ்ட் கொடுத்த சூர்யா title=

ஜீ தமிழ் மெகா சீரியல் மாரி: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் சமயபுரத்து மாரியம்மனின் குங்குமத்தால் மாரியின் உயிர் காப்பாற்றப்பட்டது. அதன்பிறகு, இந்த முறையும் உங்க பிளான் வேஸ்ட்டா போய்டுச்சு என தாரா டீமை நக்கல் அடிக்க அவர்கள் கோபத்துடன் அங்கிருந்து கிளம்புகின்றனர். 

வீட்டிற்கு வந்த இவர்கள் நாம போடுற திட்டம் எல்லாம் இப்படி வேஸ்ட்டா போகுது, இந்த மாரியை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என யோசிக்க கோரக்கின் ஞாபகம் வர அவரை சென்று சந்திக்கலாம் என முடிவெடுக்கின்றனர். 

கோரக்கை சந்தித்து நடந்த விஷயங்களை சொல்கின்றனர், மாரியை எப்படியாவது பழிவாங்க வேண்டும், ஐடியா சொல்லுங்க என்று கேட்க மோஹினியை வைத்து கருவை கலைப்பது மட்டுமில்ல மாரியையும் தீர்த்து கட்டலாம் என சொல்கிறார். 

மேலும் படிக்க | அஜித்தை வைத்து படம் இயக்க காத்திருக்கும் அட்லீ! ஸ்க்ரிப்ட் ரெடி..அண்ணன் ரெடியா?

அதன் பிறகு தன்னுடைய மந்திர சக்தியால் மாயா மோகினியை தோன்ற வைத்து மாரியையும் மாரியின் கர்ப்பதையும் கலைக்க ஏவி விடுகிறார். மாயா மோகினி அங்கிருந்து கிளம்ப இங்க நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் அங்கு ஒரு பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் தெரிய வைக்கிறார். 

மோஹினி ஒரு பெண்ணாக வந்து கதவை தட்ட சூர்யா கதவை திறக்கிறான், நான் வெளியூரில் இருந்து வந்திருக்கிறேன். இங்க ஒரு பிரச்னையாகிடுச்சு. ரவுடிகள் என்னை துரத்திட்டு வருவதாகவும் காப்பாற்ற வேண்டும் என்றும் கெஞ்சுகிறார். இரவு மட்டும் தங்க அடைக்கலம் கொடுத்தால், காலையில் ஊருக்கு கிளம்பி விடுவேன் என அனுமதி கேட்கிறாள் மோஹினி.

Maari TV Serial Online

சூர்யா மாரியிடம் என்ன செய்வது என்று கேட்கிறான். மாரி பாவம் அந்த பொண்ணு, நைட் இங்க தங்கட்டும் காலையில் ஸ்டேஷனலில் விட்டு விடலாம் என்று சொல்லி அந்த பெண்ணிற்கு அடைக்கலம் கொடுக்கிறாள்.

இந்த சீரியலில் கடந்த நேற்றைய எபிசோடில் தாரா கோரக்கை வைத்து ஏவி விட்டு மோஹினி மாரி வீட்டிற்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | பிக்பாஸ் 7: பிரதீப் ஆண்டனி மொத்தமாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அதாவது மோஹினி மாரியை எப்படி கொலை செய்யலாம் என்று யோசிக்க மறுபக்கம் தாரா கேங் கோரக்குடன் சேர்ந்து இங்கு நடப்பதை அந்த தண்ணீர் வழியாக பார்த்து கொண்டிருக்கின்றனர், அதனை தொடர்ந்து எப்படியாவது சூர்யாவை வெளிய அனுப்ப வேண்டும் என மோகினி யோசிக்கிறது. 

கொஞ்ச நேரம் கழித்து எனக்கு ரொம்ப பசிக்குது, சாப்பிட எதாவது கொடுங்க என்று சொல்லி கேட்க வீட்டில் சாப்பிட எதுவும் இல்லாத காரணத்தால் மாரி என்ன செய்வது என்று யோசிக்கிறாள். சூர்யா நான் வெளியே போய் வாங்கிட்டு வரேன் என்று கிளம்பி செல்கிறான். 

சூர்யா வெளியே சென்றதும் மோஹினி ஒரு கயிறை வைத்து மாரியின் கழுத்தை நெரித்து கொன்று விடலாம் என பிளான் போடுகிறாள். பிறகு ஒரு கயிறை எடுத்து கொண்டு மாரியை நெருங்கி செல்கிறாள். மாரியின் கழுத்தில் கயிறை போட போகும் நேரத்தில் சூர்யா வீட்டிற்கு வந்து விட மாரியை எதுவும் செய்ய முடியாமல் போகிறது.

இதனால் மோஹினி மாரியை எப்படி கொல்வது என்று யோசிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | அடேங்கப்பா.. பாக்ஸ் ஆபிஸில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மாஸ் கலக்கல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News