மயக்க மருந்தை யார் குடிச்சா என்ன? ரத்னா வருவாளா? அண்ணா சீரியல்

Anna TV Serial: சௌந்தரபாண்டி திட்டத்துக்கு பலியான கனி.. ஷண்முகம் செய்ய போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 30, 2024, 02:05 PM IST
  • சௌந்தரபாண்டி திட்டத்துக்கு பலியான கனி
  • ஷண்முகம் செய்ய போவது என்ன?
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
மயக்க மருந்தை யார் குடிச்சா என்ன? ரத்னா வருவாளா? அண்ணா சீரியல் title=

Anna TV Serial Online: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான இந்த சீரியலில் மணப்பெண் மண்டபத்திற்கு வரும்போது பேனர் கீழே சரிந்து விழுந்த நிலையில் அபச குணம் என்று தொடங்கியது. அதனால், என்ன இப்படி நடக்குது பொண்ணு ராசி இல்லாதவளோ என எல்லோரும் பேச தொடங்குகின்றனர்.

தாய் மாமாவும் இந்த கல்யாணம் நடக்குமா நடக்காதா என்று தெரியலையே என்று சந்தேகத்துடன் பேசும்நிலையில், கவிதாவின் அக்கா அதற்கு தடை சொல்கிரார். மாமா கொஞ்ச நேரம் சும்மா இரு மாப்பிள்ளை வீட்டுக்காரர்களே எல்லாம் எடுத்து போட்டு செய்யறாங்க இந்த மாதிரி வாழ்க்கை யாருக்கு கிடைக்கும் என சொல்கிறாள். 

அதன் தொடர்ச்சியாக, ரத்னா ஸ்கூல் பிள்ளைகளை அழைத்து கொண்டு டூர் கிளம்ப பாண்டியம்மா ஒரு திட்டத்தை தீட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

இன்றைய அண்ணா சீரியலில் ரத்னாவை எப்படியாவது திரும்ப கல்யாண மண்டபத்திற்கு வர வைக்க வேண்டும் என சௌந்தரபாண்டி யோசிக்கிறான். டீயில் ஒரு வித மயக்க மருந்தை கலந்து பாக்கியத்திற்கு கொடுத்து விட்டால் கொஞ்ச நேரத்தில் அவள் மயங்கிவிடுவாள் என்றும்,  இந்த விஷயம் அறிந்து ரத்னா உடனே ஓடி வந்து விடுவாள் என கணக்கு போடுகின்றனர். 

மேலும் படிக்க | ரச்சிதாவிற்கு 2வது திருமணம்? மாப்பிள்ளை இவர்தானா? வைரலாகும் தகவல்…

உடனே டீயில் மயக்க மருந்தை கலந்து எல்லாருக்கும் டீ கொடுத்து வரும் சிவபாலனை கூப்பிட்டு உங்க அம்மாவுக்கு சுகர் இருக்கிறதால இது சக்கரை கம்மியா போட்ட டீயை கொடுத்து விடு என்று கொடுத்து அனுப்ப எதிர்பாராத ட்விஸ்ட்டாக கனி அந்த டீ-யை குடித்து விடுகிறாள். 

இதனால் கொஞ்ச நேரத்தில் அவள் கனி துடிதுடிக்கிறாள். அந்த விஷயம் ரத்னாவிற்கும் தெரியப்படுத்தப்படுகிறது. சௌந்தரபாண்டி டீம் யார் குடிச்சா என்ன இருக்கு? அந்த ரத்னா திரும்பவும் கல்யாண மண்டபத்திற்கு வந்தால் போதும் என சொல்கின்றனர்.

பரணி கனிக்கு சிகிச்சை கொடுத்து அவளை நினைவிற்கு கொண்டு வர முயற்சி செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சின்னத்திரை நடிகரை கரம் பிடித்த ‘சாட்டை’ பட நாயகி! ரசிகர்கள் வாழ்த்து..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News