தீவிரமாகும் நோய்... தென்கொரியாவில் சமந்தாவுக்கு சிகிச்சை?

மயோசிடிஸ் (தசை அழற்சி) நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா தென்கொரியாவில் சிகிச்சை பெறவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 30, 2022, 04:40 PM IST
  • சமந்தாவுக்கு தசை அழற்சி நோய்
  • தொடர்ந்து சிகிச்சை எடுத்துவருகிறார்
  • தற்போது தென் கொரியாவில் சிகிச்சை என தகவல்
தீவிரமாகும் நோய்... தென்கொரியாவில் சமந்தாவுக்கு சிகிச்சை? title=

தமிழில் தனது பயணத்தை ஆரம்பித்தாலும் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. நாக சைதன்யாவை திருமணம் செய்து கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார். அவரது பிரிவுக்கு பிறகு சமந்தாவின் கரியர் ஆட்டம் காணும் என பலர் ஆரூடம் கூற அதையெல்லாம் தவிடுபொடியாக்கும்விதமாக புஷபா படத்தின் பாடல், ஹாலிவுட் எண்ட்ரி என அதகளம் செய்தார் சமந்தார். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை திடீரென அவருக்கு மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோய் வந்தது. இந்தத் தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏறபடுத்தியது.

இருப்பினும் மனம் தளராத சமந்தா அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு ஹைதராபாத் வந்த அவர் அங்கும் சிகிச்சை செய்துகொண்டார். மேலும் அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில்,  அவர் மேல் சிகிச்சைக்காக தென் கொரியா செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இதற்கிடையே சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சமந்தா வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே நான் போராடிக்கொண்டிருக்கிறேன். இருந்தாலும் மனம் தளரமாட்டேன் என உருக்கமாகவும் உறுதியாகவும் கூறியிருந்தார்.

முன்னதாக தனக்கு வந்த நோய் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த சமந்தா,சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மயோசிடிஸ் (Myositis) எனப்படும் ஆட்டோ இம்யூன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. குணமடைந்த பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் குணமடைய நான் எதிர்பார்த்ததை விட அதிக நாள் எடுத்துக் கொள்ளும்போல் தெரிகிறது. நாம் எப்பொழுதும் வலுவான நிலையில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை நான் பொறுமையாக உணர்கிறேன். 

இந்த நோயில் இருந்து குணமடைய இன்னும் போராடிக் கொண்டிருக்கிறேன். விரைவில் நான் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனக்கு உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் இருந்தன. இன்னும் ஒரு நாளை என்னால் சமாளிக்க முடியாது என நினைக்கும்போது கூட அந்த நிமிடம் எப்படியோ கடந்து செல்கிறது. என்னுடைய கணிப்பின் படி ஒரு நாளில் குணமடைவதை நெருங்கி விட்டேன் என நினைக்கிறேன். இதுவும் கடந்து போகும்” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க | மனைவி வெளியிட்ட நிர்வாண புகைப்படம்! பின்னணியை உடைத்த விஷ்ணு விஷால்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News