’ரொம்ப கஷ்டமா இருக்கு.. தப்பா போடாதீங்க’ கணவர் இறப்புக்கு நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா ரியாக்ஷன்

கணவர் மாரடைப்பால் மரணமடைந்திருக்கும் நிலையில், யூடியூப் சேனல்களில் போடப்படும் வீடியோக்கள் குடும்பத்தினரை மிகவும் கஷ்டப்படுத்தும்படி இருப்பதாக நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 4, 2023, 03:36 PM IST
  • நடிகை சண்முகப்பிரியா கணவர் இறப்பு
  • தப்பான தகவல் பரப்பப்படுவதாக புகார்
  • அப்படி செய்ய வேண்டாம் என வேண்டுகோள்
’ரொம்ப கஷ்டமா இருக்கு.. தப்பா போடாதீங்க’ கணவர் இறப்புக்கு நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா ரியாக்ஷன் title=

சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகரின் மரணம் சின்னத்திரை வட்டாரத்தை உலுக்கியுள்ளது. நட்சத்திர தம்பதிகளாக அறியப்பட்ட இருவரும் அண்மையில் தான் முதலாம் ஆண்டு திருமண நாளை வெகு சிறப்பாக கொண்டாடினர். இத்தனைக்கும் பிட்னஸில் செம கான்ஸியஸாக இருக்கும் அரவிந்த் சேகருக்காக இப்படியான இறப்பு என நடிகர் நடிகைகள் மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தையும் வென்றிருக்கிறார். தொடர்ச்சியாக பிட்னஸிலும் அக்கறை கொண்டவராக இருந்துள்ளார். 

மேலும் படிக்க | பிரபல சீரியல் நடிகையில் கணவர் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

அவருக்கு வயது 30 மட்டுமே.  நடிகர் சந்தானத்துடன்  கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தில் நடித்திருந்த நடிகர் மற்றும் மருத்துவரான சேதுராமன் 2020 ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 35 தான். இந்த செய்தி அப்போது மிகப்பெரிய அதிர்ச்சியாகவும், சினிமா வட்டாரத்திலும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதேபோன்றதொரு அதிர்ச்சியை அரவிந்த் சேகர் இறப்பில் சினிமா வட்டாரம் இப்போது சந்தித்திருக்கிறது. அவரின் இறப்பு குறித்து யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடங்களில் பல்வேறு செய்திகள் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இதில் ஏதும் உண்மையில்லை என அவரது மனைவியும் நடிகையுமான ஸ்ருதி சண்முகப்பிரியா தெரிவித்துள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், கணவரின் இறப்பில் மிகுந்த வலியுடன் இருப்பதாகவும், அதில் இருந்து மீண்டு கொண்டிருக்கும் நேரத்தில் பல செய்திகள் அவருடைய இறப்பு குறித்து பகிரப்பட்டு வருவதாகவும், இதனால் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சல்களுக்கு ஆளாகிக் கொண்டிருப்பதால், தயவு செய்து அப்படியான செய்திகள் ஏதும் வெளியிட வேண்டாம் என கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அரவிந்த் சேகரின் இழப்பு தங்களுக்கு பேரிடியாக அமைந்திருந்தாலும், அதில் இருந்து மீண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கும் வேலையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் எல்லாம் பரப்பப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மாரடைப்பால் கணவர் உயிரிழந்துவிட்டார், அதைத் தவிர வேறொன்றும் இல்லை. அவர் ஒரு சிவில் இன்ஜினியர், பிட்னஸ் மீது அதிக ஆர்வம் உண்டு. ஆனால் மற்றப்படி பரவும் செய்திகளில் உண்மையில்லை என நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | மீனாட்சி பொண்ணுங்க: வெற்றியுடன் பூஜாவுக்கு கல்யாணம்.. புஷ்பா போடும் மாஸ்டர் பிளான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News