முதலாளியின் மரணத்தால் கதறி அழுத கன்று: கண்கலங்கிய நெட்டிசன்கள், வைரல் வீடியோ

Emotional Viral Video: முதலாளிக்காக கதறி அழும் கன்றின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. இது இணையவாசிகளை வெகுவாக பாதித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 16, 2022, 01:45 PM IST
  • சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள ஒரு வீடியோவில் ஒரு விலங்கின் துயரம் தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது.
  • ஒரு நபரின் வளர்ப்பு கன்று ஒன்று, அவரது மரணத்தால் அதிகப்படியான துக்கத்துக்கு ஆளாகிறது.
  • அது மற்ற நபர்களை பின்தொடர்ந்து மயானத்துக்குச் சென்று அங்கு தனது முதலாளியின் உடலைப் பார்த்து அழத் தொடங்குகிறது.
முதலாளியின் மரணத்தால் கதறி அழுத கன்று: கண்கலங்கிய நெட்டிசன்கள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: ஒருவருடன் பற்றுதல் ஏற்பட்டுவிட்டால், அது உண்மையான பற்றாக இருந்தால், உயிர் உள்ளவரை அது மாறாது. அது மனிதர்களுக்கு இடையில் இருந்தாலும் சரி, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் இருந்தாலும் சரி, உண்மையான அன்பு எப்போதும் மேலோங்கி இருக்கும். இப்படிப்பட்ட அன்பை வெளிக்காட்டும் ஒரு வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இதைப் பார்தால், பார்ப்பவர்களால் கண்கலங்காமல் இருக்க முடியாது. 

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள ஒரு வீடியோவில் ஒரு விலங்கின் துயரம் தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது. ஒரு நபரின் வளர்ப்பு கன்று ஒன்று, அவரது மரணத்தால் அதிகப்படியான துக்கத்துக்கு ஆளாகிறது. அது மற்ற நபர்களை பின்தொடர்ந்து மயானத்துக்குச் சென்று அங்கு தனது முதலாளியின் உடலைப் பார்த்து அழத் தொடங்குகிறது. இந்த வீடியோ ஜார்க்கண்டில் உள்ள ஹசாரிபாக் பகுதியை சேர்ந்தது என்று கூறப்படுகின்றது. அந்த வீடியோ வெளியான உடனேயே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முதலாளியின் மரணத்தால் மனம் உடைந்த கன்று

இந்த காணொளியில் ஒரு நபர் இறந்துவிட்டதையும் அவரது உடலை அடக்கம் செய்ய கிராமவாசிகள் பலர் இடுகாட்டிற்கு வந்துள்ளதையும் காண முடிகின்றது. ஆனால் அப்போது காணப்பட்ட ஒரு காட்சி அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்தியது. தனது முதலாளியின் மரணத்தால் மிகுந்த துயரத்துக்கு ஆளான அவரது செல்லக் கன்றும் மயானத்தை அடைந்தது. அதுமட்டுமின்றி, இறந்த தனது முதலாளியின் உடலைப் பார்த்து சத்தமாக அழ ஆரம்பித்தது. கன்றுக்குட்டிக்கு தனது முதலாளியின் மீதுள்ள பற்றுதலைக் கண்டு ஊர் மக்களும் அந்த வாயில்லா ஜீவனைக் கொண்டு இறுதிச்சடங்குகளை செய்ய வைத்தனர். 

மேலும் படிக்க | ’ஜஸ்ட் மிஸ்’ பைக்கை விட்டு உயிர் தப்பிய நபர்; வைரல் வீடியோ 

இறுதிச்சடங்குகளை செய்த கன்று:

செல்லக் கன்று தன் முதலாளியிடம் காட்டும் அன்பைப் பார்த்தால், இருவருக்கும் இடையே எவ்வளவு ஆழமான பிணைப்பு இருந்திருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது. இந்த வீடியோவை பத்திரிக்கையாளர் @imShaktiojha தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்வீட்டில், "ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் தனது முதலாளி இறந்தவுடன் செல்லக் கன்று மயானத்தை அடைந்தது. முதலாளியின் முகத்தை பார்க்க அது முகத்தை மூடியிருந்த துணியை அகற்றிக்கொண்டே இருந்தது. கிராம மக்கள் கன்றுக்குட்டியைக் கொண்டு இறுதி சடங்குகளை செய்தனர்.” என்று எழுதியுள்ளார். 

மனதை உருக வைக்கும் வீடியோவை இங்கே காணலாம்: 

தற்போது இந்த வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்த வண்ணம் உள்ளனர். முதலாளியிடன் அந்த கன்று கொண்டுள்ள பாசத்தை பார்த்து யாராலும் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியவில்லை. இதை பார்த்து கண் கலங்காதவர்களும் இருக்க முடியாது!!

மேலும் படிக்க | Viral Video: மிக குறுகிய மலை முகட்டில் வீரர் புரியும் சாகசம்; அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News