அந்த மனசுதாங்க கடவுள்: நெட்டிசன்களை பீல் பண்ண வைத்த குட்டி பையன், வீடியோ வைரல்

Rare Viral Video: கொளுத்தும் வெயிலில் பறவைகளுக்கு தண்ணீர் கொடுத்த குட்டி பையனை கொண்டாடும் இணையவாசிகள்... நீங்களும் வீடியோவை பாருங்கள்!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 10, 2023, 06:51 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @Priyanka14081 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு இதுவரை சுமார் 21,000 வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
அந்த மனசுதாங்க கடவுள்: நெட்டிசன்களை பீல் பண்ண வைத்த குட்டி பையன், வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. குழந்தைகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இந்தியாவில் இப்போது கோடை காலம். கோடை வெயில் அனைவரையும் வாட்டி வதைக்கின்றது. வெயிலுக்கு மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என்ற பாகுபாடே இல்லை. இந்த காலத்தில் அனைவரும் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே இருக்க விரும்புகிறார்கள். இந்த கொளுத்தும் வெயிலில் அதிக தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிக அவசியமாகும். மனிதர்களுக்கு இது சாத்தியம். ஆனால், விலங்குகளும் பறவைகளும், குளம், குட்டை போன்ற இயற்கையான நீர் வளங்களையே நம்பியுள்ளன. இதன் காரணமாகத் தான் பல பொது இடங்களில் விலங்குகளும், பறவைகளும் தண்ணீர் பருக பெரிய தொட்டிகள் மற்றும் பெரிய பாத்திரங்களில் மனிதர்கள் தண்ணீர் ஊற்றி வைப்பதை பார்க்கிறோம். 

இது தவிர பாம்பு முதல் அணில் வரை பல விலங்குகளுக்கு மனிதர்கள் குழாய்களிலிருந்து தண்ணீர் பிடித்து கொடுப்பதையும் சமூக ஊடகங்களில் பல வீடியோக்களில் நாம் பார்த்துள்ளோம். அந்த வீடியோக்களின் மூலம் அந்த விலங்குகளின் தாகத்தையும், அவற்றுக்கு நீர் வழங்கும் மனிதர்களின் குணத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. சமீபத்திலும் அப்படி ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவில், ஒரு சிறுவன் கருணையுடன் பறவைகள் கூட்டத்திற்கு தண்ணீர் வழங்குவதை காண முடிகின்றது. இந்த வீடியோ நம் இதயங்களை கவரும் வகையில் உள்ளது. 

ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள இந்த  வீடியோ -வில், சிறுவன் ஒருவன் பறவைகளுக்கு பாசமாக தண்ணீர் கொடுப்பதைக் காண்கிறோம். அந்த சிறுவன் ஒரு தண்ணீர் தொட்டியின் குழாயிலிருந்து தனது வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி, பறவைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய பாத்திரத்தில் கவனமாக ஊற்றுகிறார். கருணை மற்றும் பச்சாதாபத்தின் இந்த செயல் எண்ணற்ற பார்வையாளர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் நேர்மறையான பல சிந்தனைகளை பரப்பி வைரல் ஆகி வருகின்றது. 

சிறிய செயல்களின் சக்தி

இத்தகைய சைகைகள் சிறிய செயல்களின் சக்தி மற்றும் நம்மைச் சுற்றியுள்ள உலகில் அவை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை நினைவூட்டுகின்றன. பல வித சவால்களை தினம் தினம் சந்தித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு இந்த வீடியோ ஒரு வித அமைதியையும், நேர்மறை எண்ணத்தையும், புத்துணர்ச்சியையும் அளிக்கும் வண்ணம் உள்ளது. கடினமான காலங்களிலும் நாம் அனைத்து உயிரினங்களின் மீதும் இரக்கத்தையும் அக்கறையையும் காட்ட வேண்டும் என்பதை இந்த விடியோ எடுத்துக்காட்டுகின்றது. 

மேலும் படிக்க | Viral Video: கில்லாடி தான்... ரொம்ப நேக்கா பலாப்பழத்தை கீழே விழ வைக்கும் யானை...!

இதயத்தை வென்ற சிறுவன்

கொளுத்தும் வெயிலில், ஒரு இடத்தில் பல பறவைகள் இருப்பதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. அப்போது ஒரு சிறுவன் அந்த பறவைகளுக்கு தண்ணீர் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் தண்ணீர் காலியாகி விட்டதை கவனிக்கிறான். சற்றும் தாமதிக்காமல் அங்கு இருக்கும் தண்ணிர் தொட்டி குழாயிலிருந்து தன் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடித்து அந்த பாத்திரத்தில் விடுகிறான். இன்னும் தண்ணீர் தேவைப்படுவதை தெரிந்துகொண்டு மீண்டும் தண்ணீர் பிடித்துக்கொண்டு வர திரும்ப குழாயை நோக்கி செல்கிறார். இங்கு கவனிக்க வெண்டிய விஷயம் என்னவென்றால், அந்த சிறுவன் காலில் காலணிகளை கூட அணியவில்லை. கொளுத்தும் வெயிலில் பறவைகளுக்காக மிக பொறுப்புடன் தண்ணீர் பிடித்துக்கொண்டு வரும் சிறுவன் நம்மை கவர்கிறான். அவன் குழாயில் தண்ணீர் பிடிப்பதிலும், பின்னர் முறையாக குழாயை மூடுவதிலும், நீரை சிந்தாமல் எடுத்துச்செல்வதிலும், அவனது அனைத்து செயல்களிலும் ஒரு நேர்த்தியான நிதானமும் பொறுப்பும் தெரிகிறது.

விடியோ வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @Priyanka14081 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை சுமார் 21,000 வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ஒரு பயனர் சிறுவனை, 'தனது பறவை நண்பர்களுக்கு உணவளிக்கும் அருமையான சிறுவன்' என்று விவரித்துள்ளார். 'இந்த சிறுவன் ஒரு அழகான குட்டி தேவதை' என்று குறிப்பிட்டுள்ளார். பல பயனர்கள் சிறுவனின் இரக்க குணத்தை வியந்து பாராட்டியுள்ளனர். 'இந்த வீடியோ இதயத்தை தொடும் வகையில் உள்ளது' என மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். 

மேலும் படிக்க | மசாஜில் மயங்கிய மங்கி... கை எடுத்ததும் கொடுத்த மாஸ் ரியாக்ஷன்: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News